ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்குவோம் என்றும், தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்களே இறங்கி வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சில வாரங்களிலேயே முறிந்தது.

தீவிர தாக்குதல்

இந்நிலையில், மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தகவல்படி, புதன்கிழமை இரவு மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், வெள்ளிக்கிழமை புதிதாக எந்த தாக்குதல்களும் பதிவாகவில்லை என்றே கூறப்படுகிறது.

குறையும் ட்ரம்பின் அமெரிக்க ஆதரவு

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் உடனான இந்தப் போர் அமெரிக்க மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வருவதாக சர்வதேச வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு | Trump Announces Continued Attacks On Iran

Image Credit: Spectrum News

அந்தவகையில், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் குறித்த போர் ஏற்படுத்தியுள்ளதால், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பிற்கு அரசியல் ரீதியாக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு 28 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments