திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.

1990.07.31 அன்று இடம்பெற்ற இவ் படுகொலைச் சம்பவத்தில் 11 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இப் படுகொலைக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில், குறித்த படுகொலையை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால் விளக்கேற்றி, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, அஞ்சலியும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments