புதிய இணைப்பு

யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 72 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி செயலாளர் நந்தன கலபட குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரை 56.34 வீதமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது 

முதலாம் இணைப்பு

2024, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று முற்பகல் 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பு 20 வீதம், களுத்துறை 32 வீதம், நுவரெலியா 25 வீதம், முல்லைத்தீவு 25 வீதம், வவுனியா 30 வீதம், இரத்தினபுரி 20 வீதம், மன்னார் 29 வீதம், கம்பஹா 25 வீதம், புத்தளம் 23 வீதம், பொலன்னறுவை 35 வீதம் என்ற அளவில் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது | Prez E Ection Province Wise 20 Percentage

வாக்குகள் பதிவாகியுள்ள வீதம்

அத்துடன், குருநாகல் 30 வீதம், திகாமடுல்ல 30 வீதம், திருகோணமலை 30 வீதம், மாத்தறை 28 வீதம், கண்டி 20 வீதம் மற்றும் பதுளை 21 வீதம். கேகாலையில் 18 சதவீதம் என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, மொனராகலை மற்றும் காலியில் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மட்டக்களப்பில் 17 வீதமும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக குறைந்த 10 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.


Gallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments