ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், வடகொரிய பிராந்திய அமைதிக்கு கேடு விளைவிப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் வடகொரியா சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையையும் நடத்தியது.

இந்த சோதனையை தனது மகளுடன் சேர்ந்து கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

வடகொரியாவின் மேற்கு பகுதியில் உள்ள சோ ஹியன் நகரில் இருந்து இந்த நவீன ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வடகொரியா மேர்கொள்ளும் இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.   

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி…..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments