முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்முல்லைத்தீவு தேராவில் பகுதியில் 52 வயதுடைய பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணை
சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

