ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க பயங்கரவாதப் படைகளை ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெற்றிகரமாக விரட்டியடித்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானிய வணிகக் கப்பலை வழிமறித்துத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன.

ஈரானியக் கப்பல்

ஈரானியக் கப்பலை அதன் எல்லைக்குள் மீண்டும் விரட்டும் நோக்கில் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தகவல் அறிந்தவுடன் IRGC இன் கடற்படைப் பிரிவுகள் அதிவேகமாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி கொடுத்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் படைகளின் இந்தத் தலையீட்டால், அமெரிக்கக் கடற்படையினர் அங்கிருந்து பின்வாங்கி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments