கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் கண்டி தேசிய மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

