தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசியல் பரப்பில் பெரும் குழப்பம் நிலவுகின்றது.

108 இடங்களை வென்ற தவெக கட்சியை தனிப்பெரும் கட்சி என்ற வகையில், ஆட்சி அமைக்க ஆளுநரால் அழைக்கவில்லையென்று கூறப்படுகின்றது.

ஆனால், இன்று முன்னதாக, ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், விஜய்யிடம் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று கூறி, அவர் உரிமை கோருவதை அனுமதிக்க மறுத்துவிட்டார்.

பெரும்பான்மையைப் பெறுவதற்காக விஜய் முன்வைத்த திட்டத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு நாட்களில் நடந்த இரண்டாவது கூட்டமான இதில், நடிகர்-அரசியல்வாதியான விஜய் 118 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களை வழங்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியதோடு கூட்டம் முடிவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திமுக – அதிமுக இணைவு குறித்தும் பேசப்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி… 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments