ஆயுத மோதல் முடிந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸின் டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு (TLHRC) மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போர்க்கால அத்துமீறல்களுக்குப் பொறுப்புக்கூறலையும் பரிகாரம் தேடுதலையும் வலியுறுத்தி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பல ஆண்டுகளாக நடைபெற்ற சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தொடர்ச்சியான அழைப்புகள் இருந்தபோதிலும், போரின் போது இழைக்கப்பட்ட கொடிய துஷ்பிரயோகங்களுக்கான தண்டனையின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது என்று இருகட்சி நாடாளுமன்ற ஆணையம் தெரிவித்துள்ளது.

17 ஆண்டுகள்

இலங்கையில் ஆயுத மோதல் முடிந்து 17 ஆண்டுகள் ஆன பின்னரும், கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அத்துமீறல்களுக்கான தண்டனையின்மை தொடர்கிறது, என ஆணைக்குழு தெரிவித்தது.

17 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி! அமெரிக்க காங்கிரஸ் குழு அறிக்கை | Justice Denied To Tamils After 17 Years

Advertisement

இன்று, உயிர் பிழைத்த தமிழ் மக்களும் அவர்களது அன்புக்குரியவர்களும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வேளையில், இழைக்கப்பட்ட தீங்குகளுக்கு நீதி வழங்கவும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்யவும் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்துகிறது.

2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், வடகிழக்குத் தாயகம் முழுவதிலும் உள்ள தமிழர்களும், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களும் மே 18 அன்று தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தைக் கடைப்பிடித்த வேளையில் இந்தத் தலையீடு நிகழ்ந்துள்ளது.

இந்தப் படுகொலைகள் தமிழ் தேசத்திற்கு எதிரான ஒரு இனப்படுகொலையாகும் என்று தமிழ் அமைப்புகளும், உயிர் பிழைத்தவர்களும் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச அழைப்புகள் மீண்டும் வலுப்பெற்றன.

பல நாடுகளைச் சேர்ந்த சட்டமியற்றுபவர்கள், உரிமை அமைப்புகள் மற்றும் ஆதரவுக் குழுக்கள், தமிழ் உயிர் பிழைத்தவர்களின் தொடர்ச்சியான துயரத்தை அங்கீகரித்தும், போர்க்கால அட்டூழியங்களுக்கு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் இல்லாததைக் கண்டித்தும் அறிக்கைகளை வெளியிட்டன.

போர்க்கால அத்துமீறல்

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க காங்கிரஸின் கீழ் செயல்படும் TLHRC, போர்க்கால அத்துமீறல்கள், கட்டாயக் காணாமலாக்கம், இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறல் தோல்விகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விசாரணைகள் மற்றும் விளக்கக் கூட்டங்கள் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் பதிவை இதற்கு முன்னர் ஆய்வு செய்துள்ளது.

Advertisement

சமீபத்திய ஆண்டுகளில், ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்தும், அத்துடன் அடக்குமுறை, கண்காணிப்பு மற்றும் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளின் தோல்வி தொடர்பான தொடர்ச்சியான கவலைகள் குறித்தும் மனித உரிமை ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் குடிமைச் சமூகப் பிரதிநிதிகளிடமிருந்து ஆணையம் சாட்சியங்களைக் கேட்டறிந்துள்ளது.

போர்க்கால அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையையோ, நீதியையோ, அல்லது அர்த்தமுள்ள இழப்பீடுகளையோ வழங்குவதில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று சர்வதேச உரிமைக் குழுக்களும், தமிழ் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளும் மீண்டும் மீண்டும் வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தப்பது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments