அம்பாறையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(11.06.2026) அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூந்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் சிவயோகன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வர் ரி.சரவணபவன், அமெரிக்க மிஷன் தேவாலய போதகர் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.


