பிரசவத்தின் பின் ஏற்பட்ட தொடர் காய்ச்சல் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் தன் மழலையின் முகத்தைக் கண்டு மகிழ வேண்டிய நேரத்தில், அந்தப் பிஞ்சுக் குழந்தையை தவிக்கவிட்டுச் சென்றுள்ள இந்தத் தாயின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.   

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் முதலாவது உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

26 வயதுடைய  இளம் தாய் ஒருவர், குழந்தை பிரசவித்த சிறிது நேரத்திலேயே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை, பேத்தாழை பகுதியைச் சேர்ந்த அவரது மறைவு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே, அவதானமாக இருங்கள் • வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். காய்ச்சல், உடல்வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் விசேட கவனம் செலுத்துங்கள்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments