ஸ்ரேவேல் புலநாய்வுத் துறையின் வதந்தியால் கடுமையாகக் குழம்பிய ட்ரம் ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கின் போதே ட்ரம்பைக் கொல்லுமாறு கோரி காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளைக் (Banners) சுட்டிக்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலக்குப் பட்டியல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன்.
நாம் இத்தகையதொரு சூழலையே எதிர்கொண்டுள்ளோம்.
Advertisement
ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்கள் இதற்கு முன் பார்த்திராத அளவிலான மட்டங்களில் மிகக் கொடூரமாக அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்துமாறு நான் அறிவுறுத்தல்களை விட்டுச் சென்றுள்ளேன்.
தெஹ்ரான் (ஈரான்) தான் இறக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விரும்புகின்றது
