செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம்(07.08.2026) 7 என்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
56ஆவது நாளாக முன்னெடுப்பு
இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சுமாராக 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளாக இன்றைய தினம் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில், புதிதாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




