இந்த ஆண்டு நல்லூரில் கனிசமான பெண்களின் தாலிக் கொடிகள் விசமிகளால் திட்டமிட்டு அறுக்கப்பட்டுள்ளது சம்பவம் முன்னால் ஒருதர் சென்று குறித்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கைவைக்க அவர் தனது கைகளால் அவர்களைத்தள்ளிவிட பின்னால் நின்ற விசமி குறடால் தாலியை வெட்டிக்கொண்டு ஒடிவிட்டதாக சம்மந்தப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் .
இந்த வருடம் 50 திற்கு மேற்பட்ட பெண்களின் தாலிக் கொடிகள் அறுக்கப்பட்டுள்ளது சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்
