துணைவியாருடன் சென்று தனது வாக்கைப்பதிவு செய்தார் ரணில்!2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று அவர் தமது வாக்கினை பதிவு செய்தார்.
அதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் நமல் ராஜபக்க்ஷ ஆகியோரும் தமது மனைவிகளுடன் சென்று வாக்குகளை செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.