கனடாவில் உள்ள நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடி கைது! நடந்தது என்ன? | Robbery Incident Canada Sri Lankan Tamils Arrested

இதேவேளை, சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற 2 சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம் மற்றும் பொது மக்களின் வாகனங்கள் மீது மோதி சென்றதாகக் கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இவ்வாறான நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடி கைது! நடந்தது என்ன? | Robbery Incident Canada Sri Lankan Tamils Arrested

கைதானவர் இலங்கைத் தமிழர் யசந்தன் கந்தையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 10 குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது இவருக்கு எதிராக தடை உத்தரவுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்வபத்துடன் தெடர்புடைய 2வது சந்தேக நபரின் விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *