கிளிநொச்சியில் பரந்தன் பூநகரி வீதியின் செல்விபுரம் வீதியின் கரையில், நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பூநகரி, பள்ளிக்குடா, செட்டியார் தரைவெளியைச் சேர்ந்த 69 வயதுடைய செல்லையா கனிஷ்டநாதன் என்ற முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.