யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (24-12-2024) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரவு சாரதி, நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல்! | Jaffna Bus Station Driver Conductor Stabbed

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரவு சாரதி, நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல்! | Jaffna Bus Station Driver Conductor Stabbed

ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று பேரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *