வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாெலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தன்று (01-01-2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு பின்னர் மோதலாக மாறியதில் கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கத்திக்குத்தில் படுகாயமடைந்தவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.