தமிழிழப் பகுதியில்புல்வெளியில் கிடந்த சடலம் ; தீவிரமாகும் விசாரணைவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய புல்வெளியில் காணப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்படாத நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.
