யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடுயாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுவந்தன் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு | Woman Who Went From Jaffna To Vavuniya Is Missing

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments