புத்தளம், நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு யுவதிகளும் இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும், 24 வயதுடைய இளைஞரும் ஆவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
