இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவரான பிரஷீலா சமரவீரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 50,459 நோயாளிகளும் 30 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் 

இருப்பினும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். 

இலங்கை மக்களை அச்சுறுத்தும் டெங்கு : 50 ஆயிரத்தை தாண்டிய நோயாளிகள் | 50459 Dengue Patients Across The Country

 இதற்கிடையில், நீண்ட வார இறுதி நாட்களில் பொதுமக்களின் செயல்பாடுகளால் டெங்கு நோய் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார

பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்த நீண்ட வார இறுதி நாட்களில் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களை அச்சுறுத்தும் டெங்கு : 50 ஆயிரத்தை தாண்டிய நோயாளிகள் | 50459 Dengue Patients Across The Country

இதற்கிடையில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவு அல்லது சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவில் டெங்கு அபாயம் இருந்தால், சிரமதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, அந்த அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments