அமெரிக்காவின் உயர்மட்ட தூதுவர்களை சந்திக்கப் போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கான சாத்தியமான கட்டுப்பாடுகள் போன்ற மிகவும் கடினமான தலைப்புகளைக் கையாள்வதற்கு முன்பு, கையெழுத்திட்ட போர்நிறுத்தத்தின் விதிமுறைகளை இரு தரப்பும் இன்னும் சரிசெய்ய வேண்டும் என ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்காக தோஹாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

தொழில்நுட்ப பேச்சுவார்த்தை

எனினும், அவர்கள் ஈரானியர்களை நேரடியாகச் சந்திப்பதற்குப் பதிலாக மத்தியஸ்தர்களையே சந்திப்பார்கள் என்று ஈரானும், அதனை நடத்தும் கத்தாரும் முன்னதாக தெரிவித்திருந்தன.

அமெரிக்க உயர்மட்ட தூதுவர்களை புறக்கணித்த ஈரான்! மீண்டும் உச்சமடையும் பதற்றம் | Iran Says It Will Not Meet With Top Us Envoys

Advertisement

இதேவேளை, வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கத் தரப்புடன் எந்தவொரு மட்டத்திலும் சந்திப்புகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.

எனினும், இரு நாடுகளும் குறைந்த அளவிலான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments