யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா விசிட் விசாவில் சென்ற இளம் குடும்ப பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தையையும், கைவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வருடம் கனேடிய அரசாங்க்கம் வழங்கியிருந்த விசிட் விசா திட்டத்தில் பெருமளவு இலங்கை தமிழர்கள் தம் உறவுகள் ஊடாக கனடாவுக்கு சென்றிருந்தனர்.

மகளுடன்  தவிக்கும்  கணவன் 

அந்தவகையில் யாழை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண் ஒருவர் , கனடாவில் வசிக்கும் தனது சகோதரி அழைத்த நிலையில் , யாழில் கணவரையும் , பிள்ளையையும் விட்டு விட்டு கனடா சென்றுள்ளார்.

குறித்த பெண் கனடா சென்று அகதி அந்தஸ்து கோரிய பின்னர் கணவர் மற்றும் மகளை கனடா எடுப்பது திட்டமாக இருந்துள்ளது.

கனடா சென்ற பெண் அங்கு அகதி அந்தஸ்து பெற்றதுடன் வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், அவரால காசு அனுப்பப்பட்டு, மகளின் பிறந்தநாள் வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

எனினும் கடந்த சில மாதங்களாக பெண்ணின் நடவடிக்கைகாளின் மாற்றம் ஏற்பட்டதுடன், கணவன் மற்றும் மகளுடனான தொடர்பினையும் குறைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் கனடா வாழ் நண்பர் ஒருவர் மூலம் , தனது மனைவி வேறொரு ஆணுடன் அங்கு நெருக்கமாக பழகி வருவதாக அறிந்து கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மனவிக்கு பலமுறை அழைப்பை மெற்கொண்ட நிலையில், பல அழைப்புக்களின் பின்னர் அழைப்பை எடுத்த குறித்த பெண், கணவநை எடுத்தெறிந்து பேசியதுடன், தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந் நிலையில் தனது வயதான தாயுடன் தனது சிறுவயது மகளுடனும் , கணவர் நிர்க்கதியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாட்டு வாழ்க்கை மோகத்தால் மனைவியை கனடாவுக்கு அனுப்பி தானும் செல்லலாம் என்ற கனவுடன் காத்திருந்த கணவனுக்கு , மனைவி கைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்காள் கூறுகின்றன. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments