இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

விற்பனைக்குரிய பொருள் கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமற்ற நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் கையடக்கத் தொலைபேசி மோசடிகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை | Police Warn Of Online Mobile Phone Scams

தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும் எனவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.கூடிய வட்டி என அமெரிக்காவில் இருந்து பரப்பப்படும் வதந்திகளை நம்பி பலர் ஓண்லைனில் சேவர் செய்து பல மில்லியனை இழந்தவர்களின் விபரங்களும் எம்மிடம் உள்ளது. எனவே வழர்ந்து வரும் உலகில் மோசடிகளும் அதிகரிப்பதைக் காணமுடிகின்றது , அதைவிட அறிமுகம் இல்லாத மனிதர்களை நம்பி வெளிநாடு செல்லவன பல மில்லியன் பணங்களைக் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியலும் நீழுகின்றது

இவ்வாறான மோசடிகளைத் தவிர்க்க, பொருள் கிடைத்த பின்னர் பணம் செலுத்தும் (Cash on Delivery) முறையை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments