பாகம் மூன்றின் ஐந்தாவது தொடர்

29/07/1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்ததுஎன்ன?

அதை அடுத்து ஜே.ஆர்.ஜேவர்த்தனா  கடுமையாகப் பயந்தார், இவர்கள் தற்கொலைதாரிகளாக  மாறிவிட்டார்கள். எங்கே எந்த இடத்தில் தாக்குதல் நடக்கும் என்பது தெரியாது? ஆனால் இப்படி ஒரு தாக்குதல் எதிர்காலத்தில் நடந்தால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும், என்பதை ஜெயார் அறிந்து கொண்டார்.
உடனே போய் இந்தியாவின் காலில் விழுந்தார் ஜே.ஆர் ஜேவர்த்தனா “நீங்களே புலிகளை வளர்த்தீர்கள் நீங்களே அவர்களை அழித்துத் தரும்படி தயவாகக்கேட்டார்” ராஜீவ்விடம்.

எப்ப வருவார்கள் என எதிர்பார்த்த ராஜீவ் அவர்களிற்கு மிக்க மகிழ்ச்சியாகயிருந்தது. அதை ஏற்றுக் கொண்டது மட்டும்  இன்றி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதற்காக தான் கொழும்பிற்கு  வருவதாக உறுதி அளித்தார் ராஜீவ் அவர்கள்; பெரும் மகிழ்ச்சியில் ஜே.ஆர் கொழும்பு திரும்பினார்,.இது இப்படி நடந்து  கொண்டேயிருக்க இந்திய அதிபர் ராஜீவ் அவர்கள் பேசவல்ல அதிகாரியான பூரியை யாழ்ப்பாணம் அனுப்பி இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக எமது தலைவருக்கு  தெரியப்படுத்தி விட்டு பெரும் நிறைவோடு இந்தியா திரும்பினார் பூரி அவர்கள்.29/07/1987  அன்று, ராஜீவ் அவர்கள் கொழும்புக்குச்  சென்று இந்தியா இலங்கை  ஒப்பந்தத்தில்  கைச்சாத்திட்டு திரும்பும் பாதையில் வைத்து இலங்கை ராணுவச்சிப்பாய் ஒருவர் பலமான முறையில் துவக்கு பின் பக்கத்தால் அதிபர் ராஜீவ் காந்தி அவர்களின் தோளில் அடித்தார். அந்த அடியின் வலி தான் தமிழர்களிற்கு நிரத்தரத்  தீர்வுகொடுக்க ராஜீவ் பின்னடித்ததாக மூத்த போராளிகள் நகைச்சுவையாகச் சொல்வார்கள். 

அடியையும் வேண்டிக் கொண்டு ஒப்பந்தில் கைச்சாத்தும் இட்டுவிட்டு ராஜீவ் இந்தியா திரும்பினார்,
அதை அடுத்து அவர் போய் சில குறிப்பிட்ட  நாட்களில் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேச இந்தியா வருமாறு தலைவருக்கு அழைப்பு வந்தது,  அதனால் தலைவர் தன்னை தயார்படுத்துவதற்காகப்  விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களிற்கும்  மூத்த போராளிகளிற்குமான” பிறெஸ் ஒன்றுகூடல்” ஒன்று  தயார்படுத்தினார். அதில் நான் இந்தியா போய் பேச்சு வாத்தையில் கலந்து பேசிவிட்டு வரும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக கோபாலசாமி, மகேந்திரராஜா அல்லது மாத்தையா அவர்களை நியமிப்பதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் தலைவர்   தெரியப்படுத்தினார்.
ஒன்று கூடல் முடிந்து அடுத்த நாள் இந்தியாவில் இருந்து. 30 /07/1987  அன்று ஹெலிக்கொப்டரில் தலைவரை பேச்சுவார்த்தைக்குக்  கொண்டுபோக திரு. குக்தா அவர்கள் சுதுமலை அம்மன் கோயிலில் வந்து இறங்கினார்,. தயாராக இருந்த விடுதலைப் புலிகளிற்கு மகிழ்சியாகயிருந்தது. 



அடுத்து தலைவர் பாலா ,அண்ணன் ,கேணல் சங்கர் அண்ணை மூவரையும் சுதுமலையில் இருந்து கூட்டிக்கொண்டு குக்தா அவர்கள்  சென்னைக்குச்  சென்றார்.  அங்கிருந்து பேச்சுவார்த்தைக்கு  இந்தியா இருந்த பிரபலியமான அசோகா  ஹோட்டலிற்கு மூவரும் அனுப்பப்பட்டார்கள்.
அங்கே வைத்து  இந்திய  இலங்கை ஒப்பந்தம் தொடர்பான வரைபை  இந்திய  அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை தலைமையாளரான திரு  டிக்சீட் அவர்கள் பாலா அண்ணையிடம் கொடுத்தார்.  பாலா அண்ணை  அதை வாசித்து தலைவருக்கு விளங்கப்படுத்தினார்.
அதிலிருந்த விடயம் தற்காலிக வடகிழக்கு இணைப்பு, இரண்டு வருடத்திற்கான இடைக்கால நிர்வாகம், இரண்டு வருடத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாண மக்களிடம் வடக்கோடு நீங்கள் இணைய விரும்புகின்றீர்களா? என்ற ஒரு பொது வாக்கடுப்பு வைத்து அதில் பெரும்பாண்மையானவர்கள் விருப்பமென வாக்கு அளித்தால் நிரந்தரமாக இணைக்கலாம் என்று அவ் ஒப்பத்ததில் எழுதப்பட்டு இருந்தது.

அத்தோடு நீங்கள் வைத்து இருக்கும் ஆயுதங்களை இந்தியா அமைதிப்படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பிரச்சனை தீரும் வரை இந்தியா அமைதிப்படை இலங்கையில் இருக்கும் எனவும், சிறுபாண்மை தமிழர்களின் பாதுகாப்பை இப்படை உறுதிப்படுத்தும். என்றும் உங்களின் போராளிகளிற்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக இந்தியா அரசு நிதி உதவி வழங்கும் எனவும் இடைக்கால நிர்வாகம் அமைந்தால் ஊர்காவல் படை அல்லது பொலிஸ் என்ற கட்டுமானத்துடன் உங்களின் போராளிகள் அதில் இணைக்கப்பட்டு அவர்களிற்கு திறிநோட்திறி 303 போன்ற ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் , அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அதை வைத்து உங்களின் மக்களைப்  பாதுகாக்க முடியும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.  ஆனால் நீங்கள் ஏற்றாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி இந்த ஒப்பந்தத்தை இந்தியா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியே தீரும் என்று தலைவருக்குத் தெரியப்படுத்தினார் தளபதி டிக்சீட் அவர்கள்,,வடக்கு மக்களிடம் வைக்கத்  தேவையில்லையென அதில் குறிப்பிடப்பட்டுயிருந்தது, இதை வாசித்த பாலா அண்ணைக்கு கடும் கோபம் வந்தது.



 வடகிழக்கு எங்களின் பாரம்பரிய பிரதேசம், அங்கே வாழ்பவர்கள் எங்களின் மக்கள் அங்கே நாங்கள் தேர்தல் வைக்க வேண்டிய தேவையில்லையெனவும்; அப்படி வைப்பதாகயிருந்தால் இரண்டு மாநிலங்களிலும் தான் வைக்க வேண்டும் என்றும் பாலா அண்ணை வாதிட்டார். ஆத்திரம் அடைந்த டிக்சிட் இதை ஏற்காவிட்டால் ஒரு சிகரேட் பத்தி முடிய முன்னர் உங்களின் 200 சாரம் கட்டிய பையன்களையும் சுட்டு த்தள்ளி விடுவோம் என மிரட்டினார்.,

இந்த முரன்பாட்டை அடுத்து தலைவரும் பாலா அண்ணையும் ஒருத்தரோடு ஒருதர் கதைக்காதவாறு தனிமைப்படுத்த பாலா அண்ணையை அவர்கள் கூப்பிட்டபோது, தலைவர் பாலா அண்ணை பிரியும் போது சொன்ன விடயம்   எதிலும் கையெழுத்து வைக்க வேண்டாம்!  எனச்  சொல்லி அனுப்பினார் சில குறிப்பிட்ட வாரம் இருவரையும் இந்தியா இராணுவம் தனிமைப்படுத்தி வைத்து இருந்தது.இது இப்படி நடந்து கொண்டேயிருக்க  இலங்கையில் இருந்த மூத்த போராளி பேவி அல்லது  இளங்குமரனோடு தலைவர் கதைத்து இலங்கையில் உள்ள தமிழரசுக்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்திடம்  எந்த ஒப்பந்தத்திலும்  கைச்சாத்து இட வேண்டாம் என்ற தகவல் அனுப்பப்படுகின்றது. தலைவரின் ஆலோசனையை நிறைவேற்றும்  போது உங்களூற்கு கடும் அழுத்தம் ஏற்பட்டால் அந்தக்காலத்தில் மட்டுமாவது லண்டனில் போய் தங்கி விட்டு வருமாறும், நீங்களும் ஏற்க வேண்டாம்! நானும் ஏற்க மாட்டேன். என்ற தகவல் அமுர்தலிங்கத்திற்கு  அனுப்பப்பட்டது,  இந்த விடயம் பரபரப்பாக  நடந்துகொண்டேயிருக்க  இதை அறிந்த ஐயா நெடுமாறன் உயர்மட்ட அரசியல் தலைவர்களோடு கடுமையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு ஐயா தீவிர ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.

 

பிரபாகரன் தனிமைப்படுத்தப்பட்டு  வீட்டுக் காவலில் இருக்கும் தகவல் ஐயாவின்  காதிற்குச் சென்று விட்டது.  உடனே கோபம் அடைந்த ஐயா தமிழ்நாட்டு  மக்களிடம் பிரபாகரனை விடுதலை செய்யும் வரை மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் நடாத்துமாறு கட்டளை வழங்கினார். இதை அறிந்த  அவரின் ஆதரவளர்கள் தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைத்  திரட்டி வீதியில் இறங்கி  பிரபாகரனை விடுதலை செய் என மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  முன்னரும் ஒரு பிரச்சனையில் ஐயாவின் கடும் உழைப்பாலேயே  தலைவர் பாதுகாக்கப்பட்டார்.   இப்பொழுதும் அவரின் கடுமையான செயற்பாட்டால் தலைவர் பாதுகாக்கப்பட்டார்.
இதைச் சமாளிப்பதற்காக  இந்தியாவின் முதல் அமைச்சராக இருந்த MGR அவர்களிடம் பிரபாகரனை நீங்கள் போய் பேசி சமாளிங்கள் என சொல்லி அனுப்பினார்  ராஜீவ் அவர்கள். பிரபாகரனை  சந்தித்த MGR  நீ ஒரு முதல் அமைச்சர் கேட்டாய் அவர்கள் இரண்டு முதல் அமைச்சர்பதவி  தருவதாகச் சொல்கின்றார்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்கினார். 



MGR தமிழர் என்ற காரணத்தால் எங்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான வடகிழக்கை குறிப்பாக இது கிழக்கை துண்டாடும் சதித்திட்டம் என்பதையும் தமிழர்பகுதியில் இருக்கும் சிங்களக் குடியேற்றங்களை பாதுகாற்பதற்காகவும், எமது தமிழீழக் கனவை சிதைப்பதற்கான திட்டம் என்பதையும் MGR அவர்களுக்கு  தெளிவு படுத்தினார் தலைவர்,. அதையடுத்து MGR சொன்ன கதை தலைவருக்கு  “நீர் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன் நீர் கொள்கையில் உறுதியாகயிரு” என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.  MGR அவர்களைக்  கொண்டுபோயும்   முன்னேற்றம் ஏற்படவில்லை அதுவும் தோல்வியில் முடிந்தது இந்தியவிற்கு .
இதுக்கு இடையில் இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் யாழில் உள்ள பலாலிக்கு இந்தியா இராணுவம்

29/07/1987 அன்று வந்து இறங்கி   விட்டது.   அப்பொழுது விடுதலைப்  புலிகளின் யாழ்மாவட்டத்  தளபதியாக லெப்.கேணல் குமரப்பா அவர்கள் இருக்கின்றார்.

 அவரிடம்  நாங்கள் இந்திய அமைதிப்படை யாழ்பாணத்திற்கு ரோந்து வரப்போகின்றோம் என்று தளபதி குமரப்பா அவர்களிடம் அனுமதி  கேட்கின்றது,  இந்தியா இராணுவம் மிகவும் ஆங்கிலம் பேசக்கூடிய தளபதி குமரப்பா” தலைவரை எங்களிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கோ! அதற்கு பிறகுதான் நீங்கள் வரலாமா? அல்லது வரக்கூடாதா? என்ற முடிவை நாங்கள் எடுப்போம்.  இல்லையெனில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்ற செய்தியை குமரப்பா வெளிப்படையாகத்  தெரிக்விக்கின்றார் இந்தியா   இராணுவத்திற்கு…..
இங்கே பயங்கர  முரனண்பாடு  நடந்துகொண்டிருக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் ஏற்பாட்டில் தலைவர்  பாலா அண்ணை இருவரும் அதிபர் ராஜீவ்காந்தியைச் சந்திப்பதற்கு  ஏற்பாடு செய்கின்றார் எம். ஜீ . ஆர்
ராஜீவ்வை சந்திப்பதற்கு வாகனத்தில் தலைவரையும், மற்றும் பாலா அண்ணையையும் ஒரு பாதுகாப்பான வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இந்தியா அதிகாரிகள் செல்கின்றார்கள். தலைவரைக்  கண்டதும் ராஜீவ் அவர்கள் கதிரையில் இருந்து எழுந்து வந்து “நீர் ஒரு மாவீரன் தான் நான் உன்னை அறிந்திருக்கின்றேன் என புகழாரம் சூட்டினார்”.

அதை அடுத்து ராஜீவ் சொல்ல  பண்ருட்டி ராமச்சந்திரன் மொழிபெயர்த்து  தமிழில் தலைவருக்குத் தெரியப்படுத்தினார் , அதில் அவர் சொன்னது “அங்கே அவர்கள் பக்கமும் பெரும் பிரச்சனை உள்ளது;  பெரும்பாண்மை சிங்களவர்கள் உங்களின் தீர்வு விடயத்தை ஏற்கவில்லை, அதனால் நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  என அவர் ஆலோசனை வழங்கினார்,  வடகிழக்கு  தற்காலிக இணைப்பு அதாவது வடகிழக்கு    தற்காலிக அரசாங்கம்  உங்களிற்கு வழங்கலாம். நீங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.  இந்தியா அமைதிப்படை உங்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அதில் முடிவெடுக்கும் அதிகாரிகளாக 7 பேர் அதில் ஐந்து தமிழர்கள்,  இரண்டு முஸ்லிம்ங்கள், எனவும் பெரும்பாண்மை நீங்கள் தான் என்று ராஜீவ் தெரிவிக்க இதை எழுத்து மூலம் தரமுடியுமா? என்று தலைவர் கேட்டார்.   தலைவர் கேள்வியைக் கேட்டதும் ராஜிவ் அவர்களின் கண் சிவந்தது.  எழுத்து மூலம் தர முடியாது கண்டிப்பாகத்  தருவோம் என்று ராஜீவ் பதில் அளித்த்தார்.
அடுத்து போராளிகளின் செலவு தொடர்பாக அவரிடம் கேட்போது அவர்களின் புனர் வாழ்விற்காக பணம் தரலாம் என பதில் அளித்தார்.  அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவுற்றன.  இந்திய உலங்கு வானூர்தியில் தலைவர் மற்றும் கேணல்.சங்கர் அண்ணை, இருவரையும் ஏற்றிக் கொண்டு 01/08/1987 அன்று பலாலி விமான நிலையத்தில் விட்டது இந்திய அரசு.



அங்கே இருந்த “ரட்சிங்” அவர்கள்  தலைவரை வரவேற்றார், தலைவரைப் பார்த்து சில கேள்விகளைக்  கேட்டார். “உங்களிற்கு அழகான மனைவி  பிள்ளைகள் இருக்கின்றார்கள் நீங்கள் ஏன் சாக வேண்டும்” என்று அவர் கேட்க நீங்களும் ஒரு ராணுவவீரன்தான், நானும் ஒரு இராணுவீரன்தான் எந்த ஒரு ராணுவவீரனும் மனைவி பிள்ளைகள் என்று சாவைக் கண்டு பயப்படுவது இல்லை  என தலைவர் பதில் அளித்தார், பலாலி  இராணுவத்துடன் சில கேள்விகளிற்கு பதில் சொல்லி விட்டு இந்தியா இராணுவத்தின் வாகனத்தொடர் அணியின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் தலைவர்,

அவர்கள் வந்தது மிகவும் குழப்பமான மன நிலையில் காணப்பட்டார் ஏனெனில் அவசரமாக சில முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது. அப்பொழுது யாழ்  மாவட்டத்தளபதியாக இருந்த குமரப்பாவைக்  கூப்பிட்டு இந்தியா இராணுவத்தின் உலங்கு வானூர்தியை எடுத்துக்கொண்டு வடகிழக்கில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்.  அனைத்து மாவட்டத் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை ஏற்றிக் கொண்டு  வருமாறு  தலைவர் கட்டளை வழங்கினார். 1987 / முதலாம் மாதத்தில் இருந்து மட்டு அம்பாறை சிறப்புத் தளபதி என்ற பொறுப்பில் இருந்து விடை பெற்றார்  லெப் கேணல் குமரப்பா இறுதியில் அவர் வீரச்சாவு அடையும்போது யாழ்  மாவட்டத்தளபதியாக இருந்தார்,
அதை ஏற்றுக்கொண்ட லெப்.கேணல் குமரப்பா.         02 /08/1987 இந்தியா இராணுவத்தின் ஹெலிக் கொப்டரை வேண்டிக் கொண்டு முதலாவதாக மட்டக்களப்பிற்குச்  சென்றார், அங்கே சென்று மட்டக்களப்பு  விமானநிலையத்தில் தரையிறங்கியதும் தளபதி கருணா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பிறான்சீஸ் புலனாய்வுதுறைப் பொறுப்பாளர் திலிப் மற்றும் மூத்த போராளி  காந்தனாகிய நானும் மட்டக்களப்பு விவஸ்ரேரியத்தில் அவர்கள் முன்னரே எமக்கு அறிவித்தமைக்கு அமைய  அங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், குமரப்பா தரையிறங்கியதும்.      15 இந்திய சிப்பாய்களின் பாதுகாப்புடன் அவர்களின் வாகனத்தில் எங்களை வந்து சந்தித்தார்கள், அப்பொழுது  குமரப்பா  எங்களிடம் சொன்னார் “உங்களைக்  கூட்டிக்கொண்டு தலைவர் வரச்சொன்னதாகச் சொல்லி” எங்கள் 4 பேரையும் ஏற்றிக்கொண்டு சென்றார், நாங்கள் மட்டக்களப்பு விமான நிலையித்தில் இருந்து யாழப்பாணம்  பலாலிக்கு வந்து சேர்ந்தோம், அங்கே வந்து இறங்கியதும்  இந்திய  இராணுவம் எங்களிற்கு உணவு கொடுத்துவிட்டு பின்னர்  அங்கே பொறுப்பாக இருந்த” கப்சிங்” அவர்களிடம் எங்களை அறிமுகப்படுத்தினார் குமரப்பா., அடுத்து நாங்கள் யாழ்பாணம் உள்ளே வந்ததும் திருநெல்வேலியில் இருந்த எமது மட்டக்களப்பு தொடர்பகம் சென்று அங்கே தங்கினோம், காலை  விடிந்ததும்  தொலைத்தொடர்பு ஊடாக எங்களிற்கு தகவல் வந்தது, அதாவது எங்கள் 4 பேரையும் வெளிக்கிட்டு நிற்கவும் என்று அப்பொழுது நாங்கள் தாயாராக நின்றோம். 

காலை  எட்டு  மணிக்கு லெப். கேணல் திலீபன்  வந்து எங்களை ஏற்றிக் கொண்டு தலைவரைச் சந்திப்பதற்காக யாழ் பிரம்படியில் அமைந்து இருந்த வீட்டில் விட்டார். அங்கே ஒன்று கூடலிற்காக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்த மாவட்டத்  தளபதிகள் மற்றும் மூத்த போராளிகள் என சுமார் 75   இற்கு  மேற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் அங்கே நின்றோம்.
03/08/1987 அன்று மீண்டும் திலீபன் வந்து எங்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு கோல்பார்க்  அல்லது  பழைய பூங்கா என்ற இடத்தில் எங்களைக் கொண்டுவந்து இறக்கி அங்கேயே  நிக்குமாறு திலீபன் கட்டளை வழங்கினார்.
அங்கே சிறிது நேரம் நின்றோம். தனது மெய்ப்  பாதுகாவலர்கள் ஆன  சொர்ணம், பொட்டுஅம்மான், அடுத்து குட்டப்பா, இவர்களின் பாதுகாப்போடு தலைவர் எங்களிடம் வந்தார்,

வந்தவுடன் மாவட்டத் தளபதிகளை  மட்டும் கூப்பிட்டு10 நிமிடம் தனிப்பட்ட ரீதியில் கதைத்தார். அதை முடித்து விட்டு அனைத்துப் போராளிகளுடனான ஒன்றுகூடல் ஆரம்பமானது.

அதில் குறிப்பாகக் கப்டன் மற்றும் லெப்ரினன்ட் தர அதிகாரிகள் வந்து இருந்தார்கள். அதில் யாழ்மாவட்டத்தில் இருந்து வந்தவர்களில்  எமது மாவட்டத்தை சேர்ந்த சபேசன் அவர்களும் வந்து இருந்தார்.  அப்பொழுது தலைவர் பேச்சுக்களுக்கென  தன்னை வரச்சொல்லி இந்தியா அதிகாரிகள்  செய்த கொடுமைகளையும், அவர்கள் தன்னை விரட்டியதையும் அனைத்துப்  போராளிகளிற்கும் தெளிவு படுத்தி விட்டு நீங்கள் என்னை  எடுப்பதற்கு  இந்தியா அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில்தான் நான் இங்கே வந்து இருக்கின்றேன். நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் தனது நன்றியைத் தெரிவிதார். 


தொடர்ந்து என்னை நீங்கள் நம்ப வேண்டும்.  ஆனால் தற்பொழுது எமது விடுதலைப் போராட்டம் பாரிய ஒரு சிக்கலிற்குள் சென்று விட்டது.  அதனால் சில முடிவுகள் நாம் விரும்பியோ விரும்பாமலோ எடுக்க வேண்டிய  துர்ப்பாக்கிய நிலக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  அதனால் நாளைய சுதுமலைப்  பிரகடனத்தின் போது  ஆயுதம்  ஒப்படைப்பது  தொடர்பாக வெளிப்படையாக மக்களிற்குத் தெரியப்படுத்தப்போகின்றேன், .நீங்கள் எவரும் குழம்பத் தேவையில்லை.  ஏனெனில் ஒரு பிராந்திய  அரசோடு  எம்மால் மோத முடியாது. அதனால் ஆயுதங்களை  ஒப்படைப்பதாக நாங்கள் உறுதி அளித்துள்ளோம்.  இருந்தும்  எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் எமது இலட்சியத்தை நோக்கிய போராட்டம் தொடரும் ……..என போராளிகளிடம் உறுதி அளித்தார்.


ஆயதம் ஒப்படைத்த பின் வடகிழக்கு தற்காலிய  நிர்வாகம் எங்களிற்குத்  தருவதாக  இந்தியா உறுதியளித்துள்ளது. ஆனால் நாங்கள் அதை  எழுத்து  மூலம்  கேட்போது அவர்கள் அதைத்தர விரும்பவில்லை.   எங்களிடமும் ஆயுதங்களை முதலில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் நாங்களும் அவர்களிற்கு எழுத்து மூலம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் என்ற போர்வையில் குறைந்த தீர்வுகளைத்தர இந்தியா எம்மீது அழுத்தம் கொடுக்கலாம், அப்படி ஒரு நிலை வந்தால்  அதை நான் ஏற்கமாட்டேன். அந்த நிலையை மாத்தையாவிற்கு வழங்கப்படும்.   என கூறிய தலைவர் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கோ …!  என  சொன்னார்.


 எங்களோடு வந்த மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர் கப்டன் பிரான்சீஸ் பின்வருமாறு ஒரு கேள்வியைக்  கேட்டார்,. “ஆயுதங்களை  ஒப்படைத்தால் எல்லைப் புறங்களில் வாழும் தமிழ் மக்களின்  பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது?” அதற்குத்  தலைவர் “இடைக்கால அரசாங்கம் எமக்குக் கிடைத்தால்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள்.   அவர்களிடம் “த்றினோட்த்திறி” (303) போன்ற ஆயுதங்கள் இருக்கும் எனவே பாதுகாப்பிற்கு  பிரச்சனை  இல்லையென “பதில் அளித்தார்.  இரண்டாவது சபேசன் ஒரு கேள்வி கேட்டார். ” எல்லா ஆயுதங்களையும்   ஒப்படைக்கப் போகிறிங்களா?” அதற்குத்  தலைவர்” ஒப்படைத்த பின்னர்  ரீவியில் காட்டுவார்கள் தானே அப்ப பாருங்கோ” என தலைவர்  பதில் அளித்தார், அடுத்த நாள் பிரிகேடியர் சொர்ணம், போராளி குண்டப்பா, லெப் கேணல் புலேந்திரன்,  தலைவரின் மெய்ப்  பாதுகாவலங்களாக   அருகில் நிற்க  நூற்றுக்கணக்கான  போராளிகள்  வெளிப்பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு இருக்க சுதுமலையில் தலைவர் மக்கள் முன் தோன்றி பேசத்  தொடங்கினார்.

அடுத்து தலைவரின்சுதுமலை பிரகடனம் பற்றி விரிவாகப்பார்போம்

தொடரும் அன்புடன் ஈழமதி

Share:

1 thought on “b 07 பாகம் 03 தமிழிழீழக்கதை.     (Tamil Eelam of story)தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு”

Leave a reply to temlnews_writer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *