ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்குவானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்நவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) கூற்றுப்படி, அமெரிக்கப் படைகள் கிழக்கு நேரப்படி மாலை 5:00 மணிக்கு தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

மேலும், ஈரானின் ஆக்கிரமிப்பு என்று அது குறிப்பிட்டதற்கு இது ஒரு சமமான பதிலடி என இந்த நடவடிக்கையை விவரித்துள்ளது.

பயங்கர வெடிப்புச் சத்தங்கள்.. 

விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியில் இருந்த இரண்டு பணியாளர்களும் அமெரிக்க கடற்படையின் ஆளில்லா விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். 

அமெரிக்க உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியை ஈரான்.. மீண்டும் தொடங்கிய சரமாரி தாக்குதல்கள் | Us Strikes Iran Helicopter Downing Hormuz

மேலும், “இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா அவசியமாகப் பதிலடி கொடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கியமான உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உலங்குவானூர்தி விழுந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அந்த விமானம் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று குறைந்தபட்சம் ஒரு அதிகாரியாவது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளான குஹிஸ்டாக், சிரிக் மற்றும் மினாப் உள்ளிட்ட இடங்களில் பல வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments