
பாகம் மூன்றின் முதலாவது தொடர்
தலைமைப்பீடத்தின் கதை (CAPITAL OF STORY) இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது,
மட்டும் அல்லாமல் 2009 இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உன்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு. K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர் அல்லது OSCAR என்பவரால் எழுதப்பட்டது இது தமிழீழ விடுதலைப் புலிகளின்வரலாற்று ஆவணத்தொகுப்பாகும் இதை 7 முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்,
உள்ளடக்கம், 1985 தொடக்கம் 1990 வரையான பிரத்தியேகமான வரலாற்றுக் கதையின் உள்ளடக்கம்,……….!
01– 09/01/1985 பண்டிதரின் வீரச்சாவிற்கு முன்னர் அனைத்து மாவட்டங்களிற்கும் கட்டளை அதிகாரியாக இருந்த தளபதிகிட்டு,….
02 — 1986 இந்தியாவில் நடந்த கடைசிப் பயிற்சிமுகாம்,…..
03– 1985 ஆண்டு முதல் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை நடந்த சிறுசிறு தாக்குதல்கள்……
04– 1985 ஆண்டு காலப்பகுதியில் தளபதி குமரப்பா மட்டக் களப்பில் செய்த சிறந்த நடவடிக்கைகள்…..
05– 1986 ஆண்டு மாற்று இயக்கமான ரெலோவோடு சண்டையிட்டு வெற்றியீட்டினார் தளபதி கிட்டு…..
06– மட்டக்களப்பில் நடந்த ஆரம்பப் பயிற்சி தொடர்பாகப் போராளி ரெட்ணம்,…..
07– 12/10/1986 அடம்பன் நகருக்குள் முன்னேறிய இராணுவத்துடன் சண்டை…..
08– 30/03/1987 அன்று கிட்டு அவர்கள் கால் இழந்தமையால் மனநிலை பாதிக்கப்பட்ட அருணா அண்ணை,……
09–. 04/02/ 1987 பொன்னம்மான் வீரச்சாவு,…
10– 06/03 1987 யாழ் தொலைத்தொடர்பு நிலையம் மினி முகாம் தாக்குதல்….
11– 26/05/1987 ஒப்பரேசன், லிபரேசன் என்ற பேரில் சிங்களப் படையினர் வல்வெட்டித் துறை மீது பாரிய தாக்குதல்……
12– 05/06/1987வடமராட்சியில் அமைந்திருந்த முகாம் மீது தாக்குதல் நடத்த பயிற்சியை ஆரம்பித்த தலைவர், இதுதான் மில்லர் வரலாறு……
13– 29/07/1987 இந்திய, இலங்கை ஒப்பந்தம் நடந்தது என்ன……?
14– 04/08/1987 அன்றைய நாள் நடைபெற்ற இந்திய, இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகத் தமிழீழத் தேசியத்தலைவரால் முதல் சுதுமலைப் பிரகடனம்,…..
15– 14/09/1987 அன்று இரவு திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பம்….
16–. 05/10/1987குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வேங்கைகள் வீரச்சாவு…..
17–. 09/10/1987 விடுதலைப் புலிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது…….
18–. நேரடியாக் களத்தில் நின்ற தூயாமணி இது பற்றிக் குறிப்பிடுகையில்…..
19–. இவ்வாறு அந்தப் பக்கம் நடக்க தலைவருக்கு என்ன நடந்தது? என்பது பற்றி உடன் இருந்த போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில்,…..
20– யாழில் நின்ற போராளிகளிற்கு என்ன நடந்தது? மீண்டும் தூயாமணி,…..
21–. தலைவர் மணலாறு சென்றதும் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தார்……,
22–. இந்திய இராணுவத்தின் “ஒப்ரேசன் பவான்” நடவடிக்கை…….23–. பின்னர் அங்கே நடந்த சண்டை பற்றி போராளி காசன் குறிப்பிடுகையில்……
24– 02/12/1988 அன்று விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அதிபர் பிரேமதாசாவிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்து உணர்வு ஒப்பந்தம்,…..
25– “ரின் பால்”ஒப்பரேசன் பற்றி…..
26–. கட்டுப்பாட்டை மீறியதற்காக இரு போராளிகளுக்குச் சாவொறுப்பு…..
27– 03/01/1989 ஆம் ஆண்டு வை.கோபால சாமியின் வன்னிப் பயணம்……
28–. “செக்மேற் 02” நடவடிக்கை தொடர்பாக போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில்…
29– இதுதான் கிட்டு அண்ணையின் கடைசி நடவடிக்கையாகவும், கடைசி திட்டமிடலாகவும் இருந்தது…..
30– 27/11/1989 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் …….
31– இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் என்ன நடந்தது? என்பது பற்றி போராளி “பாலா” குறிப்பிடுகின்றார்……
32– பின்னர் அங்கே என்ன நடந்தது? எனப் போராளி “ஓஸ்க்கார்” குறிப்பிடுகையில்…..
33– இதே காலப் பகுதியில் யாழ்பாணத்தில் என்ன நடந்தது என்று போராளி “காமுறு” குறிப்பிடுகின்றார்…..
34– மகளிர் படையணியின் வீரமிக்க முதல் தளபதி மேஜர் சோதியா (வான்மதி) பற்றி……
09/01/1985 பண்டிதரின் வீரச்சாவிற்கு முன்னர் அனைத்து மாவட்டங்களிற்குமான கட்டளை அதிகாரியாக இருந்த கிட்டு விற்கு மேலும் ஒரு பதவி உயர்த்தப்பட்டது. அவர் யாழ் மாவட்டப் பொறுப்பாளராகத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.

கிட்டுவால் நடாத்தப்பட்ட சில தாக்குதல்களைப் பற்றிப் பார்ப்போம்.கிட்டு அவர்களும் அடுத்து பொன்னம்மான் அவர்களும் தலைவரின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள்
தளபதி “கேணல் கிட்டு” அவர்கள் தாக்குதலிற்கு செல்வதற்கான காலம் நெருங்கிக் கொண்டேயிருந்தது.04/03/1983 அன்று போராளி அற்புதன் பொணம்மான் தலமையில் உமையாள்புரம் மீதான தாக்குதலிற்கு விடுதலைப் புலிகள் அணி ஒன்று செல்கின்றது……அதில் கேணல் கிட்டுவும் செல்கின்றார்……..தாக்குதலிற்கான திட்டம் தீர்மானிக்கப்படுகின்றது, அத்திட்டத்தின்படி வீதியில் நிலக்கண்ணி வெடிகளை தாட்டு விட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருகின்றார்கள் போராளிகள்
. கண்ணிவெடிகளை கையாளும் அனுபவம் இவர்களிற்கு போதியளவு இல்லாமல் இருந்தது. இராணுவ வாகனம் இலக்கை அண்மிக்கும் நேரத்தில் அதைக் கண்டு மிரண்டு ஒடிய ஆட்டுக் குட்டியின் கால்கள்பட்டு கண்ணி வெடி வெடிக்க அனைத்துப் போராளிகளும் நிலைகுலைந்து போகின்றார்கள்……..
இதை அவதானித்த இராணுவம் இரு கவச வாகனங்களில் இருந்து போராளிகளைச் சுட்டுக் கொண்டு வருகின்றார்கள்.
இவர்களிற்கு பின் வாங்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை; ஆனால் கிட்டு மட்டும் எதிரியின் பலத்தைக் கவனிக்காது, துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜீ3 துப்பாக்கியால் இராணுவக் கவச வாகனத்தை நோக்கிச் சுடுகின்றான்……..
அவனின் இலக்குத் தவறவில்லை, இராணுவச்சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகின்றது, இராணுவம் நிலை குலைந்த வேளையில் கிட்டுவின் தலைமையில் விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக பின்வாங்கிச் செல்கின்றார்கள், தொடர்ந்து 07/04/1983 தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் அவர்களால் நிலை உயர்த்தப்பட்டார்.
தொடர்ந்து அவர் பங்குபற்றிய தாக்குதல்கள், சிறிலங்கா அரசால் திணிக்கட்பட்ட உள்ளூர் ஆட்சித் தேர்தலை புறக்கணிக்கும் பொருட்டு கந்தர் மடத்தில் இராணுவம் மீதான தாக்குதல், திருநெல் வேலித்தாக்குதல் இந்தியாவிற்குப் பயிற்சிக்கு சென்ற போராளிகளுக்கான அணிக்கு இரண்டாவது பொறுப்பாக் கிட்டு நியமிக்கப் பட்டார்.
தொடர்ந்துபயிற்சியை முடித்து 02/03/1984 தமிழீழம் வந்த கிட்டு அதே மாதம் குருநகர் இராணுவ முகாம் மீதான தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் பங்கு பற்றினார். அதே நேரம் யாழ் மாவட்டத் தளபதியாகவிருந்த கப்டன். பண்டிதர் 09/01/1985 வீரச்சாவு அடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.
யாழ் மாவட்டத் தளபதி ஆனதும்
வடமாகாணத்திலே பெரிய காவல் நிலையமாக இருந்த முகாமைத் தாக்கி அங்கு இருந்த பெரும் தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். கிட்டுவின் தொடர்ச்சியான தாக்குதலால், இராணுவம் நகர முடியாமல் கேம்பிற்குள்ளே முடங்கியது. முற்றுகையை உடைக்க பல முனைகளில் பல முறை முயன்ற சிறிலங்கா இராணுவத்திற்கு தகுந்த பதிலடிகொடுத்து, இம் முயற்சிகளை முறியடித்தவர் “தளபதி”
கேணல் கிட்டு மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்பட்டது. தமிழீழம் என்ற உயர் நிலையை அடைவதற்காக முதலாவது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை உருவாக்கினார் தளபதி கிட்டு. அடுத்து உற்பத்திக் குழுக்களை ஆரம்பித்து, அவர்கள் ஊடாக விவசாயம் மற்றும் வியாபாரம் என்பனவற்றைப் பெருக்கி மக்கள் மனங்களில் இடம் பிடித்த முதல் தளபதியாக கிட்டு கருதப்பட்டார்.
அவ்வேளை சிங்கள இராணுவத்திடம்மிருந்து மட்டுமல்ல, சமூக விரோதிகளிடமிருந்தும், தேசத்துரோகிகளிடமிருந்தும், தமிழீழ மண்ணையும், மக்களையும், பாதுகாத்தார் கிட்டு.
மற்றும் சட்டவிரோதச் செயல்கள்; சமூக ஒழுக்க மீறல்கள் சிறு பிணக்குகள்; என்பனவற்றைக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர கிராமிய நீதிமன்றங்களை அமைத்தார்.
அதனூடாக மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். கிட்டு எழுத்தாற்றல் மிக்கவர். அவர் பங்குபற்றிய சண்டைகளை நாவல்வடிவில் எழுதி மக்களிற்கு விடுதலைப் போராட்டத்தை தெளிவு படுத்தினார்.இது இப்படி இருக்க; அதே காலம் நடந்த
பயிற்சி முகாமைப் பற்றிப் பார்ப்போம்…!
1986 / 3 ஆம் மாதம் நடந்த விடுதலைப் புலிகளின் பத்தாவது பயிற்சி முகாம்… அதில் பயிற்சி எடுத்த போராளி குமார் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்

இதுதான் இந்தியாவில் நடந்த கடசிப் பயிற்சி முகாமாக இருந்தது.
அப்பொழுது தமிழீழத்தில் இருந்தும், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், போராளிகள் அவசர அவரமாக எடுக்கப்பட்டார்கள். அதனால் நாங்கள் பயிற்சி நடந்துகொண்டிருக்கும் போது தான் அங்கே வந்து அவர்களோடு இணைந்து கொண்டோம்.
எமத பயிற்சி முகாம் மணியண்ணையின் தோட்டமான கர்நாடக மாநில எல்லைப் பிரதேசமான மலைப் பிரதேசத்தை அண்டிய கும்பாரப்பிட்டி என்ற இடத்தில் அமைந்திருந்தது. எங்களின் பயிற்சி முகாம் மேலாளராக லெப்.கேணல் பொன்னம்மான் இருந்தார்.முகாம் பொறுப்பாளராக போராளி “றோய்” இருந்தார். எங்களிற்கான போராட்ட ரீதியான பாடங்களை, பொன்னம்மான், மனோ மாஸ்ற்றர், ஜெனகன் பிரதீப் மாஸ்ற்றர், இவர்கள் தந்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சியை; றோய், சஸ்ரின், புரட்சி, இவர்கள் தந்தார்கள். இதில் முந்நூற்றுஐம்பத்தைந்து போராளிகள் பயிற்சி எடுத்தோம்.
இதில் வீரச்சாவு அடைந்தவர்களை அவர் குறிப்பிடும்போது, இந்தியாவில் இருந்து பயிற்சி முடித்து தமிழீழம் வரும் போது இலங்கை கடல் படையோடு ஏற்பட்ட மோதலில் வீரவேங்கை கில்மன், வீரவேங்கை ஜஸ்ரின், இவர்கள்வீரச்சாவு அடைந்தனர்.மற்றும் 2ஆம் லெப்.அகிலன் கோட்டையில் நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்தார். இதில் பலர் உயிரோடு இருப்பதாகவும், அவர்களின் பெயர்களை அவர் எம்மிடம் சொன்னார். அவர்களின் அனுமதி இல்லாமல் இதில் பெயர்கள் குறிப்பிடவில்லை.இதில் குறிப்பிட்பட்ட ஜெனகன் மற்றும் பிரதிப் ஆசிரியர்கள் இருவரும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்துள்ளனர் ஏணையவர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்,
1985 முதல் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரையான காலங்களில் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் பற்றிப் பார்ப்போம்!
30/01/1985 அன்று பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் முகாமை கவச வண்டிகள் சகிதம் சுற்றி வளைத்து நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள். ஐந்து மணித்தியாலம் நடந்த தாக்குதலில் இராணுவத்தின் முற்றுகையை முறியடித்ததோடு மட்டும் இன்றி ஒரு பவள் கவசவாகனம் அழிக்கப்பட்டது. இருபது இராணுவத்தின் உடல்களையும்; பெருமளவான ஆயுதங்களையும்; விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.

13/02/1985 அன்று முல்லைத்தீவில் உள்ள கொக்குளாய் இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நூற்று ஆறு சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர். மற்றும் 25 பேர் காயம் அடைந்தனர், இதில்16 போராளிகள் வீரச்சாவு அடைந்தனர், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
13/03/1985 அன்று சிங்களப் பகுதியான வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மதவாச்சியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அப் பொலிஸ் நிலையம் அழிக்கப்பட்டதோடு ஒன்பது பொலிஸார் கொல்லப்பட்டனர்.
18/03/1985 அன்று நாகர்கோயிலில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இரண்டு கடல் விமானங்கள், இரண்டு ஹெலிக் கொப்டர்கள், இணைந்து தாக்குதல் நடத்தினர். அதில் விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் ஹெலிக்கொப்டர் ஒன்று சுட்டு வீழ்தப் பட்டது .
10/04/1985 அன்று ஒட்டிசுட்டானில் இராணுவம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஏ. பி . சி கட்டிடத்தை விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்தனர்.
10/04/1985 அன்று வட மாகாணத்தில் மிகப்பெரிய பொலிஸ் நிலையமான யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தை தாக்கினர். அப்பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான ஆயுதங்களையும் கைப்பற்றினர். இதில் பத்துப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.
11/04/1985 அன்று யாழ் பொலிஸ் நிலையத்தை அகற்ற படையினருக்கு உதவக் கொண்டு வந்த கிறேன் பாரஊர்தி விடுலைப் புலிகளால் பறித்துக் கொண்டு செல்லப்பட்டது.
21/04/1985 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டிசுட்டான் பாதையில் இராணுவத்தினரின் மினிபஸ்ஸை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் இருபது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
26/04/1985 அன்று வியாபாரி முலையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பன்னிரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு கவச வண்டியும் அழிக்கப்பட்டது . பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
26/04/1985 அன்று மூதூர் கட்டைப் பறிச்சானில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ ஜீப் வண்டி தகர்க்கப்பட்டது. இதில் லெப் .அமரியல் உட்பட ஏழு படையினர் கொல்லப்பட்டனர்.
28/04/1985 அன்று பருத்தித்துறையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
28/04/1985 அன்று யாழ் கரவெட்டியில் விடுதலைப்புலிகள் நடத்திய இரு கண்ணிவெடித் தாக்குதலில், பதினெட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு கவசவாகனம் அழிக்கப்பட்டது.
29/04/1985 அரியாலையில் விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித் தாக்குதலில் இரண்டு கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டதுடன்; அதில் பயணித்த பத்து இராணுவதினர் கொல்லப்பட்டனர்.
02/05/1985 அன்று மூதூரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
04/05/1985 அன்று மன்னாரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இரகசியப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.10/05/1985 அன்று மன்னாரில் அமைந்து இருந்த பொலிஸ் நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் அங்கு இருந்த ஏழு கட்டிடங்களைத் தகர்த்ததோடு ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். இத்தாக்குதலின் போது இரண்டு பொலிஸார் உயிருடன் பிடிபட்டனர். சில காலங்கள் தடுப்பில் இருந்தவர்களை பின்நாளில் கிட்டு அன்னை விடுதலை செய்தார்.

12/05 /1985 அன்று உடுப்பிட்டி மண் நிலையம் ஒன்றினுள் இருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் கைக்குண்டு விசி நடத்திய தாக்குதலில் மேஐர் .சிறிலால் மெண்டிஸ் உட்ட ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
13/05/1985 அன்று திருமலை குச்சவெளியில் விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித்தாக்குதலில், வானில் வந்த பல பொலிஸார் காயம் அடைந்தனர்.
13/05/1985 அன்று திருமலை சாம்பல்தீவு ஆறாம் கட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகள் வான் மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பல பொலிஸார் காயமுற்றனர்.
22/05/1985 அன்று திருமலைப்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் பிராண்டிஸ் டிமேல் உயர் அதிகாரி உட்பட ஐந்து பொலிஸார் கொல்லப்பட்டனர்.
01/06/1985 அன்று விடுதலைப் புலிகள் திருமலை குச்சவெளி பொலிஸ் நிலையத்தை தாக்கி முற்றாக அழித்தனர். பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் முகாமை விட்டுத் தப்பி ஓடினர். அவ்முகாமில் இருந்த நூற்றுக் கணக்கான ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
10/06/1985 அன்று குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த கடற் படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் உயர் அதிகாரி உட்ட முப்பது படையினர் கொல்லப்பட்டனர்.
11/06/1985 அன்று திருநெல்வேலியில் எழுபத்து இரண்டு அறைகளைக் கொண்ட இராணுவம் தங்கி இருந்த ஹோட்டல் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது.
12/06/1985 அன்று திகிலவத்தையில் விடுதலைப் புலிகள் இராணுவம் மீது நடத்திய தாக்குதலில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
1985 /06ம் மாதம் வரை மட்டு, அம்பாறை பொறுப்பாளராக அருணா தலைவரால் நியமிக்கப்பட்டு இருந்தார். அக்காலத்தில் தாக்குதல் தளபதியாக குமரப்பா இருந்தார். அருணா பொறுப்பு மாறிச் சென்றதும் மட்டு, அம்பாறைப் பொறுப்பாளராக அங்கே குமரப்பா கடமையாற்றினார்.
இவரின் காலத்தில்தான் நிறையத் தாக்குதல்கள் மட்டு, அம்பாறையில் நடத்தப்பட்டது . குமரப்பா என்றால் சாதாரண போராளி தொடக்கம் அனைத்து பொதுமக்களிற்கும் அது தெரிந்த பெயராகவே இருக்கும்.
அனேகமான தாக்குதல்களை மட்டு, அம்பாறை மாவட்டங்களில் செய்து; எதிரிகள் படுவான் கரையான காட்டுப் பகுதிகளிற்குச் செல்வதற்கு பயந்த நிலையை உருவாக்கியவர் குமரப்பாதான். அம் மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் மட்டு மாவட்டத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தார். பின்னர் இதை தலைவருக்குத் தெரியப்படுத்த அவர் திருமணம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார். 1987 கடைசிப் பகுதியில் இந்திய உலங்கு வானூர்தியில் குமரப்பா பொறுப்பாளர்களை ஏற்றி இறக்கும் வேலையாக மட்டக்களப்பிற்குச் சென்று வந்த காலம் அது.அப்பொழுது தான் விரும்பிய பெண்ணையும்; மட்டக்களப்பில் இருந்து இந்திய உலங்கு வானூர்தியில் ஏற்றி யாழ்ப் பாணம் கொண்டு வந்தார்.
அடுத்து அவருடைய திருமணம் வல்வெட்டித்துறை அவரின் வீட்டில் நடைபெற்றது. தலைவர் உட்பட மூத்த போராளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் திருமணம் ஆனாலும் அவர் அந்த வீட்டில் ஒரு கிழமை கூட இருக்கவில்லை. இயக்க வேலையாக தொடர்ந்து ஓடித்திரிந்து இறுதியில் அவரின் வீரச்சாவும் நடந்தது; என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
26/06/1985 அன்று சர்வதேச ரீதியில் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தவரும் அரசின் தீவிர ஆதரவாளரான யாழைச் சேர்ந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜனிற்கு விடுதலைப் புலிகள் சாவொறுப்பு வழங்கினார்கள்.
20/07/1985 அன்று விடுதலைப் புலிகள் யாழ் பொலிகண்டியில் இராணுவத்தை மறித்து தாக்கியதில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
10/08/1985 அன்று வவுனியாவில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸ் கொமாண்டோக்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் கப்டன் உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.
18/08/1985 அன்று வாகரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத் தொடர் வாகன அணி மீது விடுதலைப் புலிகள் நடத்தியதாக்குதலில் இரு வண்டிகள் சேதம் அடைந்தன. மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் தப்பி ஓடினர். அவர்களிடம் இருந்து ஆயுதம் மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டது.
23/08/1985 அன்று மட்டு வந்தாறுமுலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

29/08/1985 அன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தில் இராணுவ டிரக் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய RPG தாக்குதலில் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர். தளபதிஅருனா தலையில் அம்பாறை தம்பட்டை பகுதியில் வழமையாக ரோந்துவரும் ஒரு சிறிலாங்கா படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தீட்டம்பட்டது அதற்கு முதலாவது கட்டளையிடும் அதிகாரியாக தளபதி அருனா இரண்டாவது தலைவராக டேவிற் அவர்களும் சென்றார்கள்,
அச்சண்டையில் தளபதி சொர்ணம் RPG வைத்து இருந்தார், மொத்தம் 15 பேர் சென்றார்கள்அதில் ஒரு வவழும் ஒரு ஜீப்பும் முன்னால் வந்து கொண்டு இருந்தது RPG அடிக்குமாறு கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார் அருனா குறி தவறாமல்GRP உந்துகனை செலுத்தியால் அடித்தார் தளபதி சொர்ணம் அண்ணா ஆனால் அது வவழுக்கு பிடிக்கவில்லை பின்னால் வந்த ஜீப்பிற்குப்பிடித்து 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மேலும் பலர்காயம் அடைந்தனர் சொர்ணம் அண்ணையின் வெற்றிகரத் தாக்குதலால் இராணுவம் நிலைகுலைந்து ஓடியது,
அதில்எமது தரப்பில் இண்டு போராளிகள் காயம் அடைந்தனர் தப்பட்டை இருந்து திருக் கொயில் வரை ஒரு நாள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் அப்பிரதேசம் இருந்தது இந்த வெற்றிகரத்தாக்குதலில் தளபதி சொர்ணம் அண்ணாவின் பங்கு பெரிதாகக் கருதப்பட்டது அன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தில் இராணுவ டிரக் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.

02/09/1985 அன்று மட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை அடிப்பதற்கு விடுதலைப் புலிகள் திட்டம்யிட்டார்கள் அருனா மற்றும் குமரப்பா தலைலையில் அத்தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது ஒன்று போராளி காந்தன் தலையில் ஈசன், கப்டன் பிரான்சிஸ், முத்தர் தவீம் மாத்தைத்தையா என 7 பேரும் அடுத்த அணியில் காக்கா அண்ணை தலைமையில் கடவுள், சொர்ணம், குமரப்பா கப்டன் ஜிங்கலி உட்பட 7 பேர் என மொத்த 15 பேர் அத்தாக்குதலிற்காகச் சென்றார்கள்,அதில் ஜிங்கலியோடு இரு போராளிகள் கும்புறு முலைப்பக்கம் இருந்து இராணுவம் வந்தால் அதைத் தடுப்பதற்காகக்காவலில் நின்றார்கள்,
முதலில் சலண்டர் அடையுமாறு ஏறாவூர் பொலிஸ்சாரிடம் கேட்டார்கள், அவர்கள் மறுத்தமையால் குமரப்பா , சொர்ணம், தவீம் மூவரும் ஒரே நேரத்தில்RPG தாக்குதல் நடாத்தினார்கள் அதில் கட்டிடம் தரைமட்டமானது அதில் இருந்த ஒன்பது பொலிஸ்சார் கொல்லப்பட்டனர். அச்சண்டையில் பல பொலிஸார் காயம் அடைந்து ஓடித் தப்பினார்கள் அதில். ஏராளமான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது,அதில் எமது தரப்பில் மாத்தையா என்ற போராளி காயம் அடைந்தார்,இது வெற்றிகரத்தாக்குதலாகயிருந்தது இதில் தளபதி சொர்னம் மிகத்திறமையாகச் செயல்பட்டார் அதனால் சொர்ணத்தை உடனே தன்னிடம் அனுப்புமாறு தலைவர் சொன்னதற்கு அமைவாக அச்சண்டை முடிந்த கையோடுசொர்ணத்தையும் கூட்டிக்கொண்டு யாழ்பாணம் சென்றார் தளபதி அருனா அங்கேஇருந்து படகு மூலம் இந்திய சென்று தளபதி சொர்ணத்தை தலைவரிடம் ஒப்படைத்தார் அருணா

அங்கேசென்ற சொர்ணம் மீண்டும் தலைவரின் பாதுகாப்புக்கடமையைச் செய்து கொண்டிருந்தார்,அருணா திரும்பி தமிமீழம் வரும் போது அவருக்கு என்ன நடந்தது என பின்னர் விரிவாகப் பார்ப்போம்
04/09/1985 அன்று திருமலை கிண்ணியாவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவாகனங்களின் முன்னால் நடந்து வந்த இராணவம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத்திற்கு வழி காட்டியாக வந்த பௌத்தபிக்கு உட்பட பதின் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
12/09/1985 அன்று தமிழ் மக்களை வேட்டையாட வந்த சிங்கள இராணுவத்தினரின் நடமாட்டத்தை கட்டுப் படுத்துவதற்காக மட்டக்களப்பு வளையறவுப் பாலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தகர்த்தனர். பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
13/09/1985 அன்று யாழ் கோட்டையில் இருந்து வெளியேற முற்பட்ட சிங்களப் படைகளை விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி முன்னேற்தைத் தடுத்து நிறுதினர்.
14/09/1985 அன்று விடுதலைப் புலிகளின் திருமலை முகாமை தாக்கச் சென்றஉலங்கு வானூர்தியை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்தினார்கள்.
15/09/1985 அன்று திருமலை கன்னியாப் பகுதியில் ரோந்து வந்த இராணுவத் தொடர்வண்டிகள் மீது நடாத்திய கன்னி வெடித் தாக்குதலில் பதினைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
16/09/1985 அன்று பருத்தித்துறை இராணுவமுகாமில் இருந்து ரோந்து செல்லப் புறப்பட்ட இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவ் நடவடிக்கையால் ரோந்து நடவடிக்கையைக் கைவிட்டு முகாமிற்குள் ஓடித் தப்பினர்.
20/09/1985 அன்று மட்டுக் கல்லடியில் ரோந்துவந்த இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு இராணுவத்தினர் அவ்விடத்திலே கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
07/11/1985 அன்று மட்டு வாகரையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
14/11/1985 அன்று மன்னாரில் 14 வாகனத்தொடர் அணி மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு பலர் காயம் அடைந்தனர்.ஜீப் வண்டி ஒன்றும் முற்றாக அழிக்கப்பட்டது.
14/11/1985 அன்று முல்லை மாவட்ட நீராவிப்பிட்டியில் மூன்று வண்டிகளில் ரோந்து வந்த இராணுவத்தினர்மீது விடுதலைப் புலிகள் “ரொக்கேட்” தாக்குதல் நடத்தினர் அதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஒரு இராணுவ வண்டி முற்றாக அழிக்கப்பட்டது.
25/11/1985 அன்று மட்டு கரடியன் ஆற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், முன்னேற முடியாமல் இராணுவம் பின்வாங்கிச் சென்றது.
27/11/1985 அன்று திருமலை சம்பூரில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
01/12/1985 அன்று அம்பாறை தம்பிலுவில் என்ற இடத்தில் இராணுவம் மீது விடுதலைப் புலிகள் “றொக்கேட்” தாக்குதல் நடத்தி ஒரு கவச வாகனம் அழிக்கப்பட்டது, பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
09/12/1985 அன்று நாவற்குழி இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்ட தோடு பலர் காயம் அடைந்தனர்.
19/12/1985 அன்று தொண்டமன் ஆற்றில் இருந்து ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்,
20/12/1985 அன்று யாழில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை ஐந்து ஹெலிகொப்டர்கள் சகிதம் சுற்றி வளைத்த இராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் கடுமையாகச் சண்டையிட்டபோது, ரெலோ, ஈபி.ஆர்.எல் உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகச் சண்டையிட்டார்கள்.
கப்டன் பண்டிதர் 09/01/1985 அன்று முற்றுகையில் சிக்கி விரச்சாவு அடைந்த போது சின்ன லோவோடு எதிரியின் முற்றுகையை உடைத்து வெளியேறினான் மேஜர் அல்பேட் அதுவே அவனின் திறமைக்கு ஒரு முன் உதாரனமாக இருந்தது,

அவனின் திறமையை அறிந்த தேசியத் தலைவர் அவனைப் பாராட்டினார்., அது மட்டும் அல்ல பண்டிதர் செய்த வேலையான ஆயுதக் களஞ்சியப் பொறுப்பாராக அவன் நியமிக்கப்பட்டான்
தொடர்ந்து தனது பணியைப் பொறுப்பெடுத்த அல்பேட் பண்டிதர் மறைத்து வைத்து இருந்த ஆயுதம் பணம் அனைத்தையும் மீட்டு எடுத்து புதிய இடங்களில் அவைகளைப் பாதுகாத்து வந்தான். 21/12/1985 அன்று பண்டிர் வீரச்சாவு அடைந்து சரியாகப் பதினொரு மாதத்தால் அடுத்த ஒரு துன்பியல் சம்பவம் எமது இயக்கத்திற்கு ஏற்பட்டது அதாவது அதாவது 21/ 12/1985 அன்று காலை தளபதி கிட்டு அண்ணைக்கு தகவல் வருகின்றது அதாவது பண்டிதர் இருக்கும் சுதுமலை முகாமை சிங்களப் படையனரின் கொமாண்டோ படையனர் உலங்குவானூர்தியில் மூலம் தரையிறங்கி அல்பேட்டின் முகாமை அழிக்கப் போகின்றார்கள் என்பதே அந்தத்தகவல்,
இதை அறிந்ததும் தளபதி கிட்டு அண்ணா வல்வெட்டித்துறையில் இருந்து மோட்டார் சைக்கலில் வேகமாக சுதுமலை வந்து கொண்டிருக்கின்றார், ஆனால் கிட்டு அண்ணையையும் நோக்கி உலங்குவானுர்திகள் வேட்டுக்களைத் தீர்த்தவண்ணம் கலைக்கின்றது அவ் சூட்டுக்களில் இருந்து மயிரிளையில் தப்பி கிட்டு அண்ணை சுதுமலைக்கு வந்து சேர்ந்தார்,

ஆனால் மூன்று உலங்குவானூர்தியில் சுமார் 50 கொமாண்டோக்களை தரை இறக்கி விட்டு வானுர்திகள் பறந்து கொண்டுயிந்தன, ஆனால் பண்டிதரோடு நின்ற போராளிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை ஒரு அடிகூட நகரவிடவில்லை கடுமையான சண்டை யில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் தளபதி கிட்டு அண்ணையும் கடுமையான கட்டளையை வழங்கிக் கொண்டியிருந்தார், இராணுவக் கொமாண்டோக்கள் நிலைகுலைந்து பின்வாங்கத் தொடங்கினார்கள் அவசர அவசரமாக உலங்குவார்திகள் தரையிறங்கி காயம் அடைந்தவர்களையும் உயிரோடு இருந்த கொமாண்டோக்கயும் ஏற்றிக்கொண்டு பின்வாங்கிச் சென்றனர் ஆனால் அவர்களை பின்வாங்க அல்பேட் விடவில்லை கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான்
கோமாண்டோக்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள் பின்புறத்தில் அவர்களை உலங்குவானூர்தியில் ஏறவிடாமல் செய்வதற்காக யமனைப் போல் நின்றுகொண்டிருந்தான் அல்பேட் அது அவர்களிற்குப் பெரிய பிரச்சனையா இருந்தது அதனால் சியாமாசட்டி என எம்மால் அழைக்கப்படும் பொம்பர் விமானத்தால் அல்பேட் குழுவை நோக்கி தாக்குதல் நடத்தியது பல வர்ணம் பூசப்பட்ட பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகொப்டர்கள் மூன்றும் தம்முடைய எம் 60 ரக மெசின் கண்ணாலும் வட்டமிட்டுத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தின. அல்பேட் குழுவினரை நோக்கி வந்த மோட்டார் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன.
திடீரென்று அல்பேட் சுருண்டு விழுந்தான். இடது கண்ணுக்கு கிழே பெரிய ஓட்டை அதிலிருந்து குருதி ஊற்றெடுத்துப் பாயும் நீர்த்தாரைகள் போல பாய்ந்தது. அல்பேட்டைத் தூக்கிக் கொண்டு சிலர் பின் விரைகின்றனர். அல்பேட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவன் தன் உயிரை இந்த மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துவிட்டான்.
இந்த நடவடிக்கையில் இராணுவம் பாரிய தோல்வியோடு பின்வாங்கியது எமது தரப்பில் மேஜர் அல்பேட் உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்கல்வியங்காடு பகுதியில்
அவர்களின் விபரம்
01) வீரவேங்கை நேரு
இயற்பெயர்: செல்லையா தில்லைச்சந்திரன்
கச்சேரி யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.10.1964
வீரச்சாவு: 09.01.1985
02) வீரவேங்கை கராட்டி ரவி
இயற் பெயர் : சோமசுந்தரம் பிரதாபன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:03.01.1964
வீரச்சாவு09.01.1985
3) வீரவேங்கை சாமி
ஆறுமுகம் தவரத்தினம்
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.12.1962
வீரச்சாவு: 09.01.1985
04) வீரவேங்கை தவம்
இயற் பெயர் : நடேசு தவராசா
அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால்
வீரப்பிறப்பு: 24.03.1962 வீரச்சாவு: 09.01.1985
05) வீரவேங்கை சிவா
இயற் பெயர் : சிவகுரு சிவேந்திரன்
அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால்
வீரப்பிறப்பு:01.01.1961. வீரச்சாவு:09.01.1985.
இவர்கள் அனைவரும் வீரமுடன் போராடி தாய் மண்ணிற்காகத் தங்களின் உயிரை அற்பணித்தனர்
அல்பேட் பற்றி கிட்டு அண்ணை எழுதிய விடயம்
நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம், என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிப்படுத்த முடியும்.
6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம்.
எம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம் அன்புப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். கிராமச் சனங்களோடு பழகும் போது அந்தச் சனங்களோடேயே ஒன்றிப்போகும் உன் எளிமையான தோற்றம், எம்மை எல்லாம் பிரமிக்கச் செய்தது.
பண்டிதர் ஆயுதக் கிடங்குகளுக்குப் பொறுப்பாக இருந்து வேலை செய்த காலத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக இருந்து வேலை செய்து இயக்கத்தின் நன் மதிப்பைப் பெற்றவன், ‘கந்தையா’ என்று செல்லமாக பண்டிதரால் அழைக்கப்பட்டவன். அச்சுவேலியில் நடைபெற்ற எம் தளம் மீதான இராணுவ முற்றுகையில் தன்னுடைய துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும்வரை போராடி வெற்றிகரமாக வெளியேறியவன். பண்டிதரைப் பலிகொண்ட அந்தப் பெரிய முற்றுகையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியதே அவனுடைய திறமைக்குச் சான்றாகும்.
பண்டிதரின் மறைவுக்குப் பின் ஆயுதக் கிடங்குகளின் பொறுப்பாளராகப் பணியாற்றி பண்டிதர் இழப்புக்கு ஈடு செய்தவன். 1982ம் ஆண்டு தொடக்கம் தன்னை எம் இன விடுதலைக்காக அர்பணித்துப் பணியாற்றியவன். அல்பேட்டை காணும் யாரும் போரிடுவதில் அனுபவம் மிக்கவன் என்பதை தவறின்றி ஊகிக்க முடியும். முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல் இருபத்துநான்குக்கு உள்ளதாகவே இருக்கும் என்று தோன்றும். ஆனால் வெய்யிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும் கண்களின் அருகிலும் நெற்றியிலும், வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும் சிந்தனையின் ஆழ்ந்தகளைத்த கருவிழிகளையும் உற்றுகவனித்த பின் அவன் வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருக்கும்.
அல்பேட் கோபித்ததை, கோபப்பட்டதை நாம் காணவில்லை என்றே கூறலாம். ஏனோ தெரியவில்லை அவனுக்குக் கோபம் வருவதில்லை. நாம் சிலவேளைகளில் வேண்டுமென்றே சீண்டுவோம். அப்போதுகூட அவன் எருமை மாட்டில் மழைபெய்வது போல இருப்பான். அன்பினால் வழிநடத்தி, அரவணைப்பால் பாதுகாத்து, அவன் வளர்த்த அவனுடைய வீரர்கள், அல்பேட்டைப் போலவே உருவாகி இருப்பதைக் கண்டு வியப்புடன் அல்பேட்டுக்குத் தலை வணங்குகின்றோம்.
குழந்தைகள் என்றால் அல்பேட்டுக்கு அலாதி பிரியம். குழந்தைகளோடு பழகும்போது அவனும் ஒரு குழந்தையாகி மழலை மொழி பேசுவதைக் கண்டு நாம் சிரித்த பொழுதுகள் ஏராளம்.
எமது முகாம்களில் அல்பேட்டைச் சுற்றி ஒரு மழலைப்பட்டாளமே இருக்கும். அந்த சின்னஞ் சிறுசுகள், அல்பேட்டைக் காணாமல் தவித்த தவிப்புக்கள், அவர்களைப் பொறுத்த வரையில், அவன் கோவிலுக்குப் போய்விட்டான். கோவிலிலிருந்து வருவான். வரும்போது அவர்கள் அடிக்கடி கேட்ட, சொல்லிவிட்ட சாமான்கள் வேண்டி வருவான். அல்பேட் அவர்களை ‘குட்டிச் சாத்தான்’ என்று அழைப்பது வழக்கம் அந்தக் குட்டிச் சாத்தான்கள் அல்பேட் கோவிலுக்குப் போய்விட்டதை, போய்விட்ட செய்தியை மிகவும் சந்தோஷத்துடனும் மிகுந்த குதூகலத்துடனும் தமக்குள்ள பரிமாறிக்கொண்டார்கள்.
அவர்கள் அந்த மழலைகள், அல்பேட் கோவிலுக்குப் பொய் திரும்பி வருவான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்….
யாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது இராணுவத் தந்திரத்துக்கமைய கோட்டையில் இருந்து எதிரிகளை வெளியில் வராமல் தடுக்கும் பொறுப்பும் கோட்டை மீதான தொடர்ந்த தாக்குதலை நடத்தும் பொறுப்பும் அல்பேட்டிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தனது பணியைச் செவ்வனே செய்துமுடித்து எமது வெற்றிக்கு வழிவகுத்தவன்.
ஒருநாள் விடியற்காலை அல்பேட் தன் முகாமில் உள்ள தோழர்களை தினசரி காலைப்பயிற்சிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில், தொலைத்தொடர்பு சாதனம் (வோக்கி ரோக்கி) அலறியது. அவன் வோக்கியை இயக்கி அழைத்த இடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியபோது, சுதுமலையில் உள்ள எமது முகாம் ஒன்று இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டும் செய்தி கிடைத்தது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து உரக்க அழைத்து விரைந்து, ஆயுதங்களுடன் வானில் (வாகனம்) ஏறி விரைந்தான்.
வான் இணுவில் பகுதியால் சுதுமலையை அண்மித்தபோது மூன்று ‘பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் அப்பகுதியை சுற்றிச் சுற்றி மெசின் கண்ணினால் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தது.
மேலே வானத்திலே வட்டமிட்டுக்கொண்டிருந்த அலுமினியப் பறவைகளில் ஒன்று உயரத்தில் இருந்து பாய்ந்து மலையில் வழுகி வருவது போல மிகமிக வேகமாக வாகனத்தை நோக்கிப் பாய்ந்து வந்து ’50 கலிபர் மெசின் கண்’ணினால் சுட்டுத் தள்ளியது. குண்டு வரிசைகள் வாகனத்திற்கு மிக அருகாக நிலத்திலே கோடிட்டுச் சென்றது. குறிதவறிவிட்டது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து ‘டே தும்பியில் இருந்து சுடுறாங்கள் கவனமாக இருங்கோ’
என்று கூறி முடிக்கவும், (பெல் ஏ,பி, 412 ஹெலிகாப்டர்களை நாங்கள் ‘தும்பிகள்’ என்று அழைப்பது வழக்கம்) உருமறைப்பு வர்ணம் பூசப்பட்ட இன்னொரு அலுமினியத் தும்பி பக்கவாட்டாக தாழப்பறந்து வந்தது. “சுடப்போறான், வானை எங்காவது ஒருபுறம் திருப்பி ஒதுக்கு” என்று கத்தினான் அல்பேட். வான் ஒதுங்க அல்பேட் தோழர்களுடன் கீழே பாய்ந்த போது விமான எஞ்சின் கடகடப்புச் சத்தத்துடன் மெசின் கண்ணின் இடைவிடாத குண்டுச்சத்தத்துடன் தும்பி தாழப்பறந்து சென்றது. வானுக்கு முன்பாக குறுக்குப்பாட்டாக குண்டு வரிசை மண்ணிலே கோடிட்டது. குறி தவறிவிட்டார்கள். மறுபடியும் இன்னும் அருகாக அல்பேட்டும், வானும், சேதமின்றித் தப்பித்துக்கொண்டது.
அல்பேட் தன் “வோக்கி ரோக்கியுடன்’ முகாமுக்குத் தொடர்பு கொண்டபோது, முகாமுக்கு பின்பாக ஹெலிகொப்டர்கள் இராணுவத்தினரை இறக்கிய தோட்டப்பகுதியான இடத்திற்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது. குழு அவ்விடத்தை அணுகியபோது இராணுவக் கமாண்டோக்கள் தாம் இறங்கிய இடத்தில் சிலரை நிலைப்படுத்திவிட்டு, மற்றும் சிலர் முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அல்பேட் கிளர்ச்சியுற்றான். ஆனால் அது சாவு குறித்த அச்சமில்ல. மிக, மிக வீரமுள்ள பதற்றமற்ற மனிதர்களுக்க இயல்பான ஒன்று. ஆபத்து பற்றிய முன்னுணர்வு தானும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது கமாண்டோக்களை எப்படியாவது தடுக்க வேண்டும்.
தோட்டங்களில் சில சில இடங்களில் மரவள்ளிச் செடிகள் மிக அழகாக செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்தது. உயர்ந்து செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்த மரவள்ளிப் பற்றைகள் ஒளியைப் புகவிடாமல் இருட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
அல்பேட் தனது குழுவினர் சகிதம் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். இராணுவத்தினர் 2 அங்குல சிறிய மோட்டார் சகிதம் எதிர்த்தாக்குதல் நடத்தினர். முன்னேறிய இராணுவக் கொமாண்டோக்கள் மீதும் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னேறியவர்கள் மீதும் தாக்குதல், நிலைகொண்டு காவல் செய்துகொண்டிருப்பவர்கள் மீதும் தாக்குதல், வானத்தில் சுற்றிக்கொண்டிருந்து இவர்களுக்கு காவல் செய்யும் அலுமினியப் பறவைக்கும் தாக்குதல். பலமணி நேரம் இடைவிடாத தாக்குதல்.தாக்குதலை அவன் செய்தான் அன்றுதான் அவன் எமது மண்ணை முத்தம் இட்டான்
நினைவுப்பகிர்வு:- கிட்டு.
26/12/1985 அன்று மன்னார் பரப்புக் கடந்தான், ஆட்காட்டிவெளி ஆகிய இடங்களில் ஹெலிகொப்டர்கள் சகிதம் ரோந்து வந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பதினாறு இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் . மூன்று றஇராணுவ வாகனங்களும் முற்றாக அழிக்கப்பட்டது.
30-04-1986 மாற்று இயக்கமான ரெலோவோடு சண்டையிட்டு வெற்றியீட்டினார் தளபதி கிட்டு .

1983 விடுதலை புலிகளால் நடத்தப்பட்ட திருநெல்வேலித் தாக்குதலின்போது விடுதலை புலிகள் வெற்றியீட்டினாலும் அதை அடுத்த நாட்களில் பல பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும் பல வர்த்தக நிலையங்கள் சிங்களக்காடையர்களால் எரிக்கப்பட்டது, அதை அவதானித்த ரொலோ குழுவினர் எஞ்ஜியிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது மட்டும் இன்றி பிரபல வர்த்தகரான மனோகரா தியட்டர் உருமையாழரிடமு மேலும் பலவர்த்தகர்களிடம் கம்பக் கேட்டுக் கொண்டுயிருந்தனர், சிங்களக்காடையர்கள் ஒரு பக்கம் இவர்களின் வண்முறை ஒருபக்கம் ரெலோமற்றும் இப்பி ஆர் எல்லப் குழுவினரின் வண் முறை ஒரு பக்கம் என மக்களிற்கு பாரிய பிரச்சனையாகயிருந்ததுஅக்,குழுவினர், அது மட்டும் அல்ல ஒரு அழகான பெண்ணைக் கண்டால் அவரை கடத்திக்கொண்டுபோய் பெற்ரோர்களிடம் கப்பம் கேட்டது கொடுக்காமல் விட்டால் தவறான வேலை செய்த பின் கொலை செய்வது இப்படியான இவர்களின் தவறான செயல்பாடுகளை மக்கள் தளபதிகிட்டு அனாவிடமே தெரியப்படுத்தி வந்தார்கள், அதனால்அக் குழுக்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண மக்களின் பூரண ஆதரவுவிடுதலைப் புலிகளிற்கு இருந்தது
இனிப் பிரச்சன உருவானதற்கான காரணத்தைப்பற்றிப் பார்ப்போம்
விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கத் திட்டமிட்டது ரெலோ. இதை முன்கூட்டியே அறிந்த கிட்டண்ணை முளையில் கிள்ளி எறிந்து விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்தார் கிட்டண்ணா29-04-1986 ஆம் ஆண்டு இக்காலப் பகுதியில் மாற்று இயக்கமான ரெலோ அமைப்பிற்கும், எமக்கும் இடையே சிறு சிறு முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.ஆனால் பெரிய பிரச்சனைகள் எதுவும் நடக்கவில்லை. இருந்தும்! இரண்டு அமைப்பினரும் தங்கள் தங்களின் போராளிகளைக் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்கள்.அரியாலைப் பகுதியில் எமது உறுப்பினர்களும்; அவர்களின் உறுப்பினர்களும்; ரோந்து நடவடிக்கையில் திரியும்போது கைகலப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் அதில் கடுமையாகக் காயப்பட்டது எமது உறுப்பினர்கள்தான்.அப்பொழுது அரியாலைப் பகுதியில் எமக்கு “நடா வீடு “என ஒரு முகாம் இருந்தது. அந்த வீட்டில் நடாதான் பொறுப்பாக இருந்தார்.
அப்பொழுது தாக்குதலிற்கு உள்ளான எமது உறுப்பினர்கள் அப் பிரச்சனையை நடா அவர்களுக்குத் தெரிவிக்கின்றார்கள் .உடனே நடா அவர்களின் இடத்திற்குச் செல்கின்றார். அங்கே வீதியில் நின்ற “ரெலோ” உறுப்பினர்களோடு கதைத்துக் கொண்டு இருந்த வேளை இவர்களைத் தாக்கியவர்கள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் “இவர்கள்தான் எங்களைத் தாக்கினார்கள்” என நடாவிடம் போராளிகள் சொன்னார்கள்.
நடா அவர்களை மறித்து இருவருக்கும் அடிபோட்டார். அடியை வேண்டிக்கொண்டு இருவரும் கள்ளியம் காட்டிற்கு ஓடிச் சென்று விட்டார்கள். அவர்களின் கோபம் விடுதலைப் புலிகளிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதாக இருந்தது.
இனிமேல் கள்ளியங் காட்டுப்பக்கம் யாராவது வந்தால் பிடிப்பது என ரெலோ திட்டமிட்டது. அதே நேரம் அந்த ஏரியாப் பகுதிக்குப் பொறுப்பாக லெப். கேணல் சரா அண்ணை இருந்தார்.
எனவே சரா அண்ணையைப் பிடிப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் சரா அவர்கள் பற்றி அவர்களிற்கு எந்தந் தகவலும் தெரியாது . முன்னர் அருணாஅவர்கள் இந்தியா சென்றார் என குறிப்பிட்டேன்
மட்டக்களப்பு சண்டை முடிந்ததும் அங்கு இருந்து சொர்ணம் அண்ணாவை கூட்டிக்கொண்டு போய் இந்தியாவில் நின்ற தேசியத் தலைவரிடம் ஒப் டைத்துவிட்டு இந்தியாவில் இருந்து தமிழீழம் வந்து கொண்டிருந்தார், மூத்த உறுப்பினர் அருணா அவர்கள் இந்தியாவில் இருந்து தமிழீழம் வரும்போது சிறிலங்கா கடல் படையினர் தாக்கி அருணா வீரச்சாவு அடைந்து விட்டார்.
என தகவல் வந்தது. ஆனால் அருணா அன்று வீரச்சாவு அடையவில்லை. அவரின் படகு சிங்களப் படையால் மூழ்கடிக்கப்பட்டு அருணா அவர்கள் பலமான முறையில் காயப்பட்டு சிங்களப் கடல் படையால் கைது செய்யப்பட்டு கழுத்துறை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அப்பொழுது விடுதலைப் புலிகளிற்கு இந்த உண்மை தெரியாமல் இருந்தது. ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் இந்த உண்மை முதலில் பிடிபட்டு சிறையில் இருந்த ரவி அண்ணா மூலம் அருணா உயிரோடு இருக்கின்றார் என்ற தகவல் காலம் கடந்து தளபதி கிட்டு அண்ணாவிற்கு வந்தது,
இதை அறிந்த கிட்டு அண்ணா உடனே பசீர்க்காக்கா மற்றும் சந்துரு இருவரும் போய் அருணா அவர்களின் படம் அடித்து நினைவு அஞ்சலி செய்வதற்காகக் கேணல் கிட்டு அண்ணையால் அனுப்பப் படுகின்றார்கள்; இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கள்ளிங் காட்டை நோக்கிப் போகின்றார்கள். அப்பொழுது “ரெலோ” உறுப்பினரான நித்தி என்பவர் இவர்கள் இருபரையும் மறித்து உங்களை விசாரிக்க வேண்டும்! “கேம்புக்குள்ளே “வாங்கோ..! என்று இவர்களிடம் சொல்கின்றார்.
அதற்கு காக்கா அண்ணை “உங்கட பிரச்சனையைதிலீபனிடம்போய்ச் சொல்லுங்கோ! நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது

“
என காக்கா அண்ணை பதில் அளிக்கின்றார். ஏனெனில் அக்காலப்குதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராகத் திலீபன் அவர்கள் இருந்தார்.
அதற்கு இறுக்கமான குரலில் “வாங்கடா! வாங்கடா ! “என நித்தி கத்திக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அங்கு இருந்து தப்புவது கடினமான விடயம் என்பதை காக்கா அண்ணை விளங்கிக் கொண்டார்.
அக்காலப் பகுதியில் காக்கா அண்ணை அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் அமைப்பில் மூன்றாவது திருமணமாகச் செய்து வைக்கப்பட்ட காலமது. திருமணம் செய்து ஆறேநாள் தான் ஆகியிருந்தது. அவரின் திருமணத்திற்கு சிறிசபாரெத்தினத்திற்கு அழைப்பிதல் கொடுத்தும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.”
எனது பெயர் பசீர்காக்கா என்று சிறியிடம் சொல்லுங்கோ!” என காக்கா அண்ணை தெரியப்படுத்த அவர்கள் அலட்சியமாகக் கேட்டுவிட்டு செல்கின்றார்கள்.ஆனால் இத்தகவலை எப்படியாவது கிட்டு அண்ணைக்கு தெரிவிக்க வேண்டும்என காக்கா அண்ணை நினைத்தார்,. அதனால் நித்தியிடம் நான் நிக்கின்றேன் இவர் அவசரமாகப் போகவேண்டும் என்று சொல்வி சந்துருவை காக்கா அண்ணை “நேராகப் போவதுபோல் வேகமாகப்போய் அரியாலை றோட்டால் திரும்பிப்போய் கிட்டுவிடம் தகவலை சொல் என அவர் சந்துருவைஅனுப்பி விடுகின்றார்.சந்துரு சொன்னது போல் கிட்டு அண்ணைக்கு தகவல் போய்விட்டது. காக்கா அண்ணை இவர்களிடம் கைதியாக இருக்கின்றார். அப்பொழுது காக்கா அண்ணை எனது பெயர் பசிர்காக்கா என்று சிறிசபாரத்தினத்திடம் சொல்லுமாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கு இடையில் கிட்டண்ணைக்கு தகவல் கிடைத்ததும்; அவர் கடுமையான கோபம் அடைந்தார்.

தொடர்ந்து ரெலோ அமைப்பின் பொறுப்பாளர்களை தொடர்பு எடுத்த போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. இதற்கு இடையில் போராளி முரளியையும் பிடித்து விட்டார்கள். அதனால் கள்ளியங்காட்டில் உள்ள ரெலோவின் “கட்டபராய் முகாமிற்கு” கிட்டு அண்ணையின் கட்டளைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது” இருவரையும் விடுதலை செய்யாமல் விட்டால் நேரடிமோதலை எதிர்கொள்ள வேண்டிவரும்” என கிட்டு அண்ணை அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.
தகவலை அவர்கள்அறிந்ததும் “யாராவது வந்தால் சுடுங்கோ” என காவல் ஆளிடம் கட்டளை வழங்கி இருந்தான் ரெலோ தலைவன்.சிறிசபாரத்தினம்

29-04-1986அன்று காலை நடா தலைமையிலான விடுதலைப் புலிகளின் குழு அவர்களின் தலைவர்களோடு கதைப்பதற்குச் செல்கின்றது இவர்கள் அவர்களின் கள்ளியங்காட்டில் அமைந்து இருந்த “கட்டபராய்” முகாமிற்கு போராளி நடா தலைமையிலான குழு சென்று கொண்டிருக்கின்றார்கள் அங்கே சென்று காவல் அரனை அண்மித்ததும் இவர்களைக் கண்டதும் காவல் கடமையில் நின்றவன் இவர்களை நோக்கிச் சுட தொடங்கி விட்டான். எமது அமைப்பைச் சார்ந்த ஒரு போராளி அவ்விடத்திலேயே வீரச்சாவு அடைந்து விட்டார்.
நிலமை பதட்டமாக இருந்ததால் நடா தலமையிலான குழு அவர்களின் முகாமை நோக்கித்தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
சண்டையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் காக்கா அண்ணையையும், முரளியையும் கூட்டிக்கொண்டு வேறு இடம் மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். ரெலோ உறுப்பினர்கள் அவர்கள் ஓட ஓட கலைத்துக், கலைத்து தாக்குதல் நடத்தியது நடா தலைமையிலான எமது அணி. இருந்தும் இவர்களின் கண்களிற்குத் தெரியாமல் அவர்கள் மறைந்துவிட்டார்கள். அதை அடுத்து வீரச்சாவு அடைந்த போராளியையும் எடுத்துக் கொண்டு முகாம் திரும்பினார்கள் எம்மவர்கள்.

இதை அறிந்த தளபதி கிட்டு அண்ணா இந்திகாவில் இருந்த எமது தேசியத் தலைவருக்குப் பிரச்சனையைத் தெரிவிக்கின்றார் அதை அறிந்த தலைவர் மூத்த போராளி கப்டன் லிங்கத்தை அனுப்பி சிறிசவபாரத்தினத்தோடு நேரடியாக பேசி பிரச்சனையைத் தீர்க்குமாறு கிட்டு அண்ணாவிற்குத் தகவல் அனுப்புகின்றார்,உடனே கிட்டு அண்ணா29-04-1986 அன்று பிற்பகல்இரண்டு மணிக்கு கப்டன் லிங்கத்தை அனுப்பி சிறியோடு பேசிவிட்டு வா என அனுப்புகின்றார்அனுப்பி விட்டு பதிலை எதிர்பார்த்த வண்ணம் இருக்கிண்றார்

அப்போழுது மூத்த போராளி லங்கத்தோடு பத்திற்கு மேற்பட்ட போராளிகள் சென்றார்கள், ஆனால் இவர்கள் 200 மீற்றர் பின்னால் நின்று கொண்டு லிங்கத்தை மட்டும் அனுப்பினார்கள், காரணம் எல்லோரும் சென்றால் பயத்தில் காலையில் நடந்தது போல் சுடுவார்கள் என்பற்காகவே லிங்கம் அவர்களை மட்டும் நிராயுதபாணியாகவே அனுப்பினார்கள் ,அங்கே சென்றதும் ஒரு மணித்தியலாம் பேசிக் கொண்டிருந்தார்கள், சரியாக மூன்று மணிக்கு வெடி சத்தம் கேட்டது அவ்வீட்டில் இருந்து மூவர் ஓடுவதை அவதானித்தோம், அங்கே நாங்கள் வேகமாகச் சென்றாம் மூத்த போராளி லிங்கம் அண்ணாவின் கண்ணில் சுட்டு விட்டு ஓடி விட்டார்கள் அவரின் பின் பக்க மண்டை பிளந்து மூளைகள் அனைத்தும் வெளியே வந்து விட்டது, அவர் அவ்விடத்திலே இறந்து கிடந்தார்,நாங்கள் அவரின் உடலை தூக்கிக்கொண்டு கிட்டு அண்ணாவிடம் ஒப்படைத்தோம் கிட்டு அண்ணா அவரின் பொடியைப்பார்த்ததும் அழத்தொடங்கி விட்டார், எங்களோடு வந்த என்னமொரு மூத்த போராளிக்கு கிட்டு அண்ணா தடியை எடுத்துக்கொண்டு இரண்டு அடி கொடுத்தார், ஏன் அவனுகளை சுடவில்லை என்பதே அவரின் கேழ்வியாகயிந்தது,இது இப்படி பதட்டமான நிலையாக இங்கே இருக்க இது வரை விங்கத்தோடு இரு போராரிகளை ரெலோ சுட்ட விடயத்தை விரிவாக எழுதி அனுப்பினார் கிட்டு அண்ணா,தலைவருக்கு தகவலை அறிந்த தலைவர் ஒன்று ரெலோ இருக்க வேணும் அல்லது நாங்கள் இருக்க வேணும் அதற்கு உரியவாறு ஒழுங்குபடுத்தவும்என தலைவரின் பதில் வந்தது
இது இப்படி இருக்க முன்னர் ரெலொவால் பிடிக்கப்பட்ட காக்கா அண்ணையும் முரளியும் இவர்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விட்டிற்குள் அடைத்து வைத்திருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் அக்கதவை உடைத்துக் கொண்டுவேகமாக ஓடிபோய் நடந்த பிரச்சனையை கிட்டு அண்ணையிடம் சொல்லி விட்டார்கள்.
அதே காலம் பருத்தித்துறை சிங்களப் படை முகாம் அடிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பெரும் தொகையான போராளிகள் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தகாலம்அது அதனால் எதற்கும் பயப்பிட வேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு இருக்கவில்லை. தொடர்ந்து சிங்களப் படைமுகாம் தாக்குதலை நிறுத்தி யாழில் உள்ள அனைத்துரெலோ முகாம்களையும்;
அடுத்து. ஈபி .ஆர். எல்.எப் முகாம்களையும்; முற்றுகை இட்டார்கள் விடுதலைப் புலிகள்.
சரியாக 30-04-1986 காலை தளபதி கிட்டு அண்ணா தலைமையில்சண்டை தொடங்கி விட்டது..! வோக்கி அலர தொடங்கியது அடி ஓட விடாத துரத்தி துரத்திச்சுடு என கட்டளை வழங்கிக்கொண்டிருந்தார் கிட்டு அண்ணாஆனால் அவர்களும் விடவில்லை கடுமையான முறையல் எதிர்த்து நின்று சண்டையிட்டார்கள்,பிற்பகல் மூன்று மணிக்கு அவர்களின் சூடு குறைய ஆரம்பித்தது காரணம் அவர்களிடம் போதிய அளவு ரவையில்லை அனைத்தையும் முடித்து விட்டார்கள், ரெலோ உறுப்பினர்கள் பின்வாங்கி பொகிலைத் தொட்ட செடிகளிற்குள் மறைவதை அவதானிக்க முடிந்தது
திடிரேன புகையிலைத் தோட்டத்திற்குள் இறங்கிச்சுட்டுக்கொண்டு சென்றோம் அதில் எங்களிற்கும் காப்பு இல்லை அவர்களிற்கும் காப்பு இல்லை அதனால் அவர்களின் வெடிப்பட்டு எமது மூன்று போராளிகள் அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார்கள் தொடர்ந்து நாங்கள் அடித்துக்கொண்டு சென்றோம் சிறிசபாரத்தினம் உட்பட பத்துப்பேர் அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள்,
சண்டை தொடர்ந்த வண்ணமே இருந்தது அதனால் அவர்களில் கனிசமானவர்கள் சரண்டர் அடைந்தார்கள் தொடர்ந்து இடங்களைக் துப்பரவு செய்தபோது அவர்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் எமது தரப்பில் முன்னர் அவர்களால் கொலை செய்யப்பட்ட இரு போராளிகள் உட்பட சண்டையில் பத்துப் போராளிகளும் மொத்தம் பன்னிரெண்டு போராளிகள் விரச்சாவு அடைந்தனர்
சண்டையின் போது சரண்டர் அடைந்த நெத்தி உட்ட 20 பேர் அவ்விடத்திலே விடுலை செய்யப்பட்டனர் ஏணையவர்கள் கைது செய்யப்பட்டு பொது மன்னிப்பு என்ற போர்வையில் சில குறிப்பிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.எதிர்த்து நின்று சண்டையிட்டவர்கள் அச் சண்டையின் போது கைது செய்யப்பட்டார்கள். இவர்களை யாழ் நல்லூர் பகுதியில் உள்ள கந்தன் கருணன் என்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.இவர்களிற்கு என்ன நடந்தது என பிறகு பார்ப்போம், கல்வியங்காடு பகுதியில் ரெலோ கும்பலுடனான மோதலில் வீரச்சாவுஅடைந்த போராளிகளின் விபரம்
த-மி-ழீ-ழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கலிங்கம் பற்றிய வரலாறு
கப்டன் .லிங்கம்
சிங்காரவேல் செல்வகுமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:16.12.1960
வீரச்சாவு:29.04.1986
நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.!
யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 39ம் ஆண்டு நினைவுகள் சுமந்த வீரவணக்க நாள் -29.04.2025
லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து சுவரொட்டிகளை ஒட்டுதல், சுலோங்களைச் சுவர்களில் எழுதுதல் போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத அவ்வேளையில் விடுதலைப் புலிகளை வேட்டையாட இரகசிய பொலிசார் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிகவும் சிரமங்களுக்கிடையிலும், கைதாகும் ஆபத்துக் கிடையிலும் செய்தார். 1981ல் முழுநேர உறுப்பினரான லிங்கம் யாழ்ப்பாணத்தில் அரியாலை சனசமுக நிலையத்தில் உடற்பயிற்சிகளைப் பெற்றார். சிறந்த போர்வீரனாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் ‘கராத்தே’ (தற்பாதுகாப்புக்கலை) பழகி பிரவுன் பட்டிக்குத் தகுதி பெற்றார்.
1982ல் தலைவர் பிரபாகரனை லிங்கம் சந்தித்தபின் அவருக்கும், இயக்கத்துக்கும் விசுவாசமாக நடப்பதே தன் கடமை என உணர்ந்து இயக்க வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1982ம் ஆண்டில் கடைசிப் பகுதியிலும், 1983ம் ஆண்டின் முதற்பகுதியிலும் வன்னிப் பகுதியில், ஒரு காட்டில் அவருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு சுடப்பழகிக் கொண்டார். கடுமையான பயிற்சிகளையும் மிகுந்த ஆர்வத்துடன் செய்தார். குறிதவறாது சுடுவதில் திறமையைக் காட்டினார். A.K சுரிகுழல் துப்பாக்கி அவருக்கு விருப்பமான ஆயுதம். தலைவர் பிரபாகரனுடன் போட்டி போட்டுக் கொண்டு துப்பாக்கி சுடுவதில் முனைந்து நிற்பார். 300 யார் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தொன்றினை தனது A.K சுரிகுழல் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியமை அவரது கடும் திறமைக்குச் சான்றாகும்.
சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட பல மோதல்களில் பங்கேற்றுக் கொண்டார். தாக்குதல்களின் போது முன்னின்று சண்டையிடுவார். ஜூலை 1983ல் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் 13 இராணுவ வீரர்களைக் கொன்றொழித்த அத்தாக்குதலில் லிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டு மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக கடமையாற்றினார். அக்காலத்தில் அரசியல் பிரச்சாரத்தை திறம்பட நடத்தி, தமிழக மக்களுடன் மிகுந்த நல்லுறவை வளர்த்துக் கொண்டார். 1985ம் ஆண்டுக் காலத்தில் தமிழீழக் காடுகளில் இருந்த பயிற்சி முகாம் ஒன்றின் பொறுப்பாளராகச் செயற்பட்டார். அக்காலத்தில் விசேஷ பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவு கப்டன் ஆனார். தலைவர் பிரபாகரனின் மிக நெருங்கியவர்களில் ஒருவராகவும், உதவியாளராகவும், மெய்க்காப்பாளராகவும் செயற்பட்டார்.
தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் நெடுமாறனும், பின்னர் பிரெஞ்சுப் பத்திரிகையாளர் இருவரும் தமிழர்படும் துன்பங்களையும், அரச பயங்கர வாதத்தையும் அறிந்து வர தமிழீழம் சென்றபோது அவர்களின் பயணப் பொறுப்பு லிங்கத்திடமே கொடுக்கப்பட்டது. லிங்கம் தமது கடமையை பூரணமாக நிறைவேற்றினார்.
லிங்கம் இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகியிருந்ததால் எல்லோரும் அவரிடம் அன்பு கொண்டிருந்தனர். கடமை என்று வரும்போது கண்டிப்பானவராகி விடுவார். அப்படிக் காட்டிக்கொள்வதற்காக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கடுகடுப்பாக பேச முயன்றாலும், வெகுளித்தனம் தான் வெளியே தெரியும். கடைசியாகத் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டிலிருந்து சென்றபோது தனது தோழர்களைப் பிரிந்த வேளையில் கண்களில் நீர் வழிய விடைபெற்றார். புதியவர்கள் அக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவரைப் புரிந்தவர்கள் கேலி செய்து சமாதானப் படுத்தினர்.
கட்டையான தோற்றம், தீட்சண்யமான கண்கள்; தடிப்பான மீசை; மெதுவான, உறுதியான நடை; அவரது குட்டையான உருவம் குறித்து அவரது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களுடைய உரையாடலுக்கிடையே ஏதாவது லிங்கம் கூற முனைந்தால் ‘நீ சின்னப் பொடியன்; அங்கால போ’ என்று வேடிக்கையாகக் கூறிச் சிரிப்பார்கள். நண்பர்களின் கேலிப் பேச்சுக்களை ரசிப்புடன் ஏற்றுக் கொள்வார்.
27.04.1986 அன்று சிறிலங்காவின் கடற்படையுடன் மோதலில் ஈடுபட்ட மேஜர் அருணாவும் அவருடன் கூடச் சென்ற விடுதலைப் புலி வீரர்களும் தளம் திரும்பவில்லை. அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக கருதிய தமிழீழ மக்கள் 28.04.1986 அன்று அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழீழமெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டன. மேடைகள் அமைத்து அருணாவின் படத்தை வைத்து மக்கள் வீரவணக்கம் செய்தனர்.
ஒலி பெருக்கிகள் அவரது வீரவரலாற்றை முழங்கின. எவரது தூண்டுதலுமின்றி மக்கள் எழுச்சி பெற்று தமிழீழ விடுதலைப்புலி வீரர்களுக்கு ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தது கண்டு எரிச்சலடைந்தனர் டெலோவினர். 24.04.1986ல் கடலில் இறந்த டெலோ உறுப்பினர்களின் பொருட்டு மக்கள் எதுவித அனுதாபமும் தெரிவிக்கவில்லை. 29.04.1986 அன்று ஹர்த்தால் செய்து இறந்த தமது தோழர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை பலவந்தப் படுத்தினர். இக்கட்டாய ஹர்த்தாலை மக்கள் ஏற்கவில்லை.
தாம் ஒழுங்குசெய்த ஹர்த்தாலுக்கு மக்களிடமிருந்து எவ்வித ஆதரவும் இல்லாதது கண்டு ஆத்திரமடைந்தனர் டெலோவினர். தமது கோட்டையாகக் கருதிய கல்வியங்காட்டுப் பகுதியிலேயே மக்கள் விடுதலைப் புலிகளுக்கு அமோக ஆதரவளித்தது கண்டு புழுங்கிய டெலோவினர் மக்களைப் பயங்கரமாகத் தாக்கினர்.
அருணாவின் படம் வைத்திருந்த அஞ்சலி மேடைகளை உடைத்தெறிந்தனர். அருணாவினதும் மற்றும் தோழர்களினதும் படம் போட்ட சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர். மக்கள் அராஜக வாதிகளினால் தாக்கப்படுவதைக் தடுக்கச் சென்ற மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் டெலோவால் கடத்தப்பட்டனர். கடத்திச் சென்று கொல்வது டெலோவினருக்கு கைவந்தகலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய ஆலாலசுந்தரம். தர்மலிங்கம் ஆகியோர் டெலோவால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திருச்சி அகதிகள் முகாமிலிருந்து 3 அகதிகள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படனர். பேச்சு வார்த்தைக்கென அழைத்து வஞ்சகமாகக் கொல்வதில் வல்லவர்கள் டெலோவினர். டெலோவின் ராணுவத் தளபதியான தாஸையும் அவரது 3 தோழர்களையும் பேச்சுவார்த்தைக்காக யாழ்ப்பான வைத்தியசாலைக்கு அழைத்துச் சுட்டுக் கொன்றனர். வைத்தியசாலைகளைத் தாக்குதலுக்குள்ளாக்குவது சர்வதேச சட்டங்களுக்கு முரணான செயல். மனித நாகரீகத்துக்கே இழுக்கானது. அங்கு நின்ற ஒரு தாதி உட்பட பல நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டதுடன். நீதிபதி ஒருவரும் கொல்லப்பட்டார்.
மறுநாள் இப்படுபாதகச் செயலை எதிர்த்து ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது டெலோவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மூவர் இறந்தனர். மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் கொலை செய்யப்படலாம் என்று உணர்ந்த எமது தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை விடுதலை செய்விப்பதற்காக லிங்கத்தை அனுப்பியது. சிறி சபாரத்தினமும் அவரது ஆட்களும் தங்கியிருந்த கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்திற்கு லிங்கம் ஆயுதமேந்தாது சென்றார். சமாதானத் தூதுவனாகச் சென்ற லிங்கம் துப்பாக்கியால் கண்ணில் சுடப்பட்டு படுபாதகமான முறையில் கொல்லப்பட்டார்.
லிங்கத்தின் வீரமரணம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலைப்புலிகளின் முதுகில் குத்திக் கொண்டிருந்த டெலோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இரு மூத்த உறுப்பினர்கள் கடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளை அழிக்க முற்பட்ட டெலோமீது தற்காப்பு யுத்தம் தொடுக்க வேண்டிய கட்டாயத்துக் குள்ளானார்கள் விடுதலைப்புலிகள். நாசகார சக்திகளில் கைப்பொம்மையாக, எதிர்ப்புரட்சி அமைப்பாக, விடுதலைப் போருக்கு முட்டுக்கட்டையாக செயல்பட்டு வந்தது டெலோ. மக்கள் விரோத நடவடிக்கைகளான கோவில் கொள்ளைகள், வாகனக் கடத்தல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு விடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் வெறுப்புக் கொள்ளும்படி செய்தனர். இஸ்லாமிய மக்களைத் துன்புறுத்தி மதரீதியான சண்டைகளை தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தான். சமூக விரோதக் கும்பலை வளர்ந்து அதற்குத் தலைமை தாங்கிய கொள்கையற்ற, பொறுப்பற்ற டெலோ தலைவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் போது சொந்த இரத்தத்தையே சிந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலைக்கு காரண கர்த்தாக்களாக இருந்த டெலோ தலைமை தண்டிக்கப்பட்டபோது மக்கள் எமது செயலை ஆதரித்தனர்; பாராட்டினர்; ஒத்துழைத்தனர். டெலோவின் அழிவினால் தமிழீழப் போராட்டம் உறுதியான ஒரு தலைமையின் கீழ் மேலும் பல மடங்கு பலம் அடைந்திருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்த பெரும் சக்தியாக உருப்பெற்று சிறிலங்காவின் முப்படைத் தாக்குதல்களை முறியடித்து வெற்றி கண்டது இதன் நேரடி விளைவாகும். இதனை எதிரிகள் உட்பட உலகமே ஒத்துக் கொள்கிறது.
சிங்கள இராணுவத்துடன் பொருதச் சென்ற லிங்கம் ரோகிகளால் கோழைத் தனமாகச் கொல்லப்பட்டார். தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக நேற்றிருந்த லிங்கம் இன்றில்லை. நாளையும் அதற்கு அடுத்து வருகின்ற காலங்களிலும் லிங்கம் எமது வரலாற்றோடு வாழப் போகிறார்
.01) வீரவேங்கை ஜெயந்தன்
பொன்னையா அமிர்தலிங்கம்
சொந்த இடம் :- வற்றாப்பளை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு :- 22.11.1962 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
02) வீரவேங்கை திலகன்
நாகராசா கிருஸ்ணானந்தன்
சொந்த இடம் :- குமுழமுனை, மணலாறு
வீரப்பிறப்பு :- 08.04.1968 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
03 )வீரவேங்கை லோகன்
மு. லோகேஸ்வரன்
குமுழமுனை, மணலாறு
வீரப்பிறப்பு : -1986 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
04) வீரவேங்கை நிமல்
தியாகராசா செல்வராசா
சொந்த இடம் : சிலாவத்தை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு:- 19.01.1963 வீரச்சாவு:- 30.04.1986:
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
05) வீரவேங்கை நாகேந்திரன்
நாகராசா சின்னத்தம்பி
சொந்த இடம்:வற்றாப்பளை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு :- 02.07.1966 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
06) வீரவேங்கை வில்வன்
பொன்னுத்துரை சிவபாலசுப்பிரமணியராசா
முல்லைத்தீவு
வீரப்பிறப்பு :- 11.09.1954 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
07) வீரவேங்கை சிவகுமார்:
இரத்தினசிங்கம் கேதீஸ்வரன்
சொந்த இடம் :- முள்ளியவளைமுல்லைத்தீவு
வீரப்பிறப்பு:- 23.02.1963 வீரச்சாவு :- 30.04.1986:
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
08) வீரவேங்கை இலங்கேஸ்
தம்பிராசா அன்ரன் இராசரத்தினம்
சொந்த இடம்:வற்றாப்பளை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு:- 28.05.1964 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
09 )வீரவேங்கைஅலிஸ்ரன்
மதுரநாயகம் அலிஸ்ரன்
உடுவில் யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு :- 20.11.1964 வீரச்சாவு :- 30.04.1986
கல்வியங்காடு பகுதியில் ரெலோ கும்பலுடனான மோதலில்
10) வீரவேங்கை ரமேஸ்
யெராட் யோகராசா
சொந்த இடம் :- சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு
வீரப்பிறப்பு:- 05.05.1965வீரச்சாவு : – 30.04.1986
வீரச்சாவு நிகழ்வு விபரம்:
கல்வியங்காடு பகுதியில் ரெலோ கும்பலுடனான மோதலில் வீரச்சாவு.
இதே ஆண்டு கடைசிப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய ரெலோ பொறுப்பாளராக சண்முகராஜா /sp என்பவர் தமிழீழ இசைக்குழுப் பொறுப்பாளர் இருந்தார். E. P R .L.F பொறுப்பாளராக தேவா இருந்தார். புளோட் பொறுப்பாளராக மாமா இருந்தார். இவ் மூன்று இயக்கங்களும் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. SP போன்ற ஒரு சிலருக்கு கருணா பொது மன்னிப்பு வழங்கி எமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்
இது இப்படி இருக்க..!
அடுத்து மட்க்களப்பில் நடந்த சிறு சிறு தாக்குதல்களையும் அடம்பன் சண்டை பற்றியும் விரிவாகப் பார்ப்போம்

தொடரும்
அன்புடன் ஈழமதி
thaarani