ஒத்திவைக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

லெபனானில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அடங்கிய ஈரானிய தூதுக்குழு சுவிட்சர்லாந்துக்குச் சென்று கொண்டிருப்பதை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி உறுதிப்படுத்தியுள்ளார்.

உயர்மட்டப் பேச்சுவார்த்தை

வாஷிங்டனில், அமெரிக்காவின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைகளின் தொழில்நுட்ப விவரங்களை ஆராய்வதற்காக ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் இருப்பதாகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஓரிரு நாட்களில் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட எதிர்பார்ப்பதாக வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில்...! பாகிஸ்தான் அறிவிப்பு | Us Iran Switzerland Talks Resume On Sunday

ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பு, இறுதி அமெரிக்க மற்றும் ஈரான் ஒப்பந்தத்தை நோக்கிய தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்து இரு தரப்பினரும் இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இது நடைபெறுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்றும் பரஸ்பர ஒப்புதலுடன் இந்தக் காலத்தை நீட்டிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments